Tuesday, August 01, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தூங்கச் சொல்லும் கவிதைகள் !

சோம்பேறிப் பையனின் கவிதைகளைப் பாராட்டி எழுதிய கவிதை இது... உண்மையில் அவரது கவிதைகள் சுறுசுறுப்பானவை ... நன்றாக இருந்தது !

தூங்கச் சொல்லும் கவிதைகள் !


தூக்கம் தொலைத்த இரவுகளில்,
தோன்றிய எண்ணங்களில் எல்லாம்
பல்வேறு கவிதைகளை
எழுதி குவித்துவிட்டு
கூப்பிட்டேன் பாராட்டுபவர்களை !
பாதி படித்து முடிக்கும் முன்பே,

கரு(த்)தாக்கத்தில் (?),
தூக்கம் வருகிறதென்று,
கொட்டாவியுடன் எழுந்து
சென்று விட்டார்கள் !

2 : கருத்துக்கள்:

said...

தூக்கம் தொலைத்த இரவுகளில் எழுதிய கவிதைகளுக்கு பாராட்டு தெரிவித்த அகில உலகத்தினருக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!! (இப்படி நானே சொன்னாத்தான் உண்டு :-) )

***

பாரட்ட, ஓர் பதிவையே கவிதையுடன் வெளியிட்ட, கடையேழு வள்ளல்களையும் மிஞ்சிய எட்டாம் வள்ளல் கோவி. கண்ணன் அவர்களுக்கு, பாராட்டுக்களும், நன்றியும் :-)) !!!

***

என்ன மூச்ச போட்டாலும், பின்னூட்டம் மட்டும் சின்கிள் டிஜிட்ட தாண்ட மாட்டேங்குதுங்க :-)

said...

//என்ன மூச்ச போட்டாலும், பின்னூட்டம் மட்டும் சின்கிள் டிஜிட்ட தாண்ட மாட்டேங்குதுங்க//

கவலையை விடுங்க ... நம்ப ஆளுங்க ... உங்கள் நண்பன் (சரவணன் இருக்கிறார்) ... கிழுமத்தூரார் மகேஸ் இருக்கிறார்,, அருமை நண்பர் சிவபாலன் இருக்கிறார் ... ஆன்மிகத் தென்றல் எஸ்கே இருக்கிறார் அனுப்பி வைக்கிறேன் அங்கு :)