நேரில் வந்து சந்தித்த பதிவர் (பகுதி 1)
மணி மாலை 7.30க்கு மேல் ஆகி இருந்தது. தூரத்திலிருந்தே கைகளை அசைத்தவர் நொடிப்பொழுதில் பாதுகாப்பு இடம் கடந்து அருகில் வந்துவிட்டார். நெருக்கமான உறவினர் நம்மைப் பார்க்க வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது உணர்வுகள். "ஐயா ! வாங்க வாங்க " என்பதை தவிர வேறு எதுவும் பேசும் முன்னும் அருகில் வந்து இரண்டுகைகளாலும் வளைத்து கட்டி அணைத்துக் கொண்டார். இருவருக்கும் இடையில் இருந்தது நட்பா, உறவா எதுவும் தெரியவில்லை. உணர்வுபூர்வமான ஈர்ப்பு, ஒருவரை ஒருவர் நேரிடையாக பார்பதில் மற்றற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள் ஆகியவை அணைத்து மகிழ்ந்ததில் உணர முடிந்தது. முன்பே தொலைபேசி வழி 'அப்பா' என்று இவரை என் மனைவி அழைத்து வந்திருந்தாலும், இவர் தோள் தொட, ஆதரவாக இவர் கை தொட்டதும் சென்ற ஆண்டில் திடீரென தன் தந்தையை இழந்திருந்த என் மனைவிக்கு அப்பாவையே உணர்வதுபோல், பார்பதுபோல் என் மனைவியிடம் நெகிழ்ச்சி இருந்தது. பயணவிவரம் கேட்டபடி எல்லோரும் வாடகைக் காரில் வீடுவந்து சேர்ந்தோம்.
எங்கள் வழக்கப்படி வீட்டுக்கு வரும் பெரியவர்களிடம் ஆசிவாங்குவதென்பது வழக்கம். அதன்படி உள்ளே வந்ததும் பூஜை அறைக்கு சென்று வணங்கி விட்டு வந்தவரிடம் தம்பதிகளாக காலில் விழுந்து ஆசி பெற்றோம். ஒரு சில நிமிடங்களில் எனது 6 வயது மகளுக்கு இவர் தாத்தாவாகிவிட இருவரும் வெகு நாட்கள் பழகியது போல் விளையாட ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே தொலைபேசி வழி தொடர்பு கொண்ட நண்பர் குழலி அவர்கள், மீண்டும் தொடர்பு கொண்டு உடனடியாக எஸ்கேவை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வருவதாக தொலைபேசி வழி தெரிவித்தார். அதன்படி அவருக்கு இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் குறித்து சொல்லிவிட்டு, நேராக அழைத்துவர குறிப்பிட்ட இடத்திற்கு சென்றோம். நண்பர் குழலி ஆப்பிள் பழங்களுடன் வந்தார். வீட்டிற்கு அழைத்து வந்து பேசிக் கொண்டிருந்தோம். எஸ்கேவும், குழலியும் விஜயகாந்த் மற்றும் பாமக அரசியல் பற்றி பேசினார்கள். அரசியலில் தன் நிலைப்பாடு என்ன என்பதை குழலி பேசினார். பின்பு தன் குடும்பம், ஊர் இவற்றைப் பற்றி பேசினார். ஒரு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு இரவு உணவை சாப்பிட ஆரம்பித்தோம். சோயா பைட்டில் செய்யப்பட்ட குருமா இருந்தது. எஸ்கே சோயா பைட்டை அழுத்தி அழுத்திப் பார்த்தார். ஒருவேளை எலும்பு எதாவது சிக்குமா என்று பார்த்திருப்பார் போலும். நாங்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்பது அவருக்கு தெரியும், இருந்தும் ஒரு எச்சரிக்கையாக சோயா பைட்டை அழுத்திப் பார்த்து திருப்தி பட்டுக் கொண்டார். அது குறித்து நான் கிண்டல் அடிக்க உணவு வேலை களைகட்டியது. இரவு உணவை முடித்துபின்பு விடைபெற்ற குழலி மறுநாள் தொலைபேசுவதாக சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு எஸ்கே தன்னுடைய மனைவிக்கு தொலைபேசியில் தான் சிங்கை வந்து சேர்ந்ததை தெரிவித்தார். இரவு 12 மணிக்கு மேலாக நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்துவிட்டு பின் இரவில் தூங்கச் சென்றோம்.
மறுநாள் காலை சிற்றுண்டியாக இட்டலியும், கிச்சடியும் முடித்துவிட்டு, வெளியில் சென்று சிங்கப்பூர் முக்கிய இடங்களைப் பார்க்கச் சென்றோம். காலை 11 மணிக்கு நான் முதலில் அழைத்துச் சென்றது லிட்டில் இண்டியா எனப்படும் நம்மவர்கள் இந்தியர் நிறைந்த இடம். அங்கு செல்லவதற்கே மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. அங்கு கோமள விலாஸ் என்னும் சைவ உணவகத்துக்குச் சென்று மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தோம். அப்பொழுது பதிவர் வடூவூர் குமார் அழைத்து மாலை 7 மணிக்கு அதே இடத்தில் சந்திப்பதாக சொன்னார். அதன்பிறகு வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே 3D சாமி படங்கள் (ப்ரேம்) Tushiv என்ற கடைக்குச் சென்றோம். அங்கு நவீன தொழில் நுட்பத்தில் செய்யப்பட்ட பல்வேறு கடவுள் உருவங்கள் இருந்தன. அவருக்கு பரிசு பொருளாக வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று தான் அங்கு அழைத்துச் சென்றேன். அவருக்கு அங்கு எல்லா உருவங்கள் பிடித்திருந்தாலும் எங்கும் கிடைக்கதற்கரிய ஒன்றாக அவருக்கு தோன்றிய, அற்புதமாக செய்யப்பட்ட சத்தியசாய் 3D ப்ரேம் ஒன்றை அவரே தேர்வு செய்து, அவரே கிரிடிட் கார்டு கொடுத்து வாங்கினார். அதில் உள்ள மின்விளக்கு அமெரிக்க வோல்டேஜ் அளவானா 110க்கு மாற்றவேண்டும் அதனால் மாலையிலோ அல்லது மறுநாளோ திருவுருவ ப்ரேமை தருவதாக கடைக்காரர் சொல்ல ரசீதைப் பெற்றுக் கொண்டு மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வந்தோம்.
அதன்பிறகு விரைவு இரயில் எனப்படும் MRT யில் ஏறி லிட்டில் இண்டியாவில் இருந்து ஹார்பர் ப்ரெண்ட் எனப்படும் செந்தோசா தீவு முனையத்திற்கு வந்தோம். வெளியில் வந்து புதிதாக திறக்கப்பட்ட VIVO CITY என்ற பெரிய கடைவளாகத்தைப் பார்த்துவிட்டு அதற்கு முகப்பில் இருக்கும் நீர் அலங்காரத்திற்கு முன் புகைப்படம் எடுத்துவிட்டு நேராக செந்தோச தீவிற்கு செல்லும் கேபிள் கார் கட்டிடத்திற்கு வந்தோம். அங்கு விரைவு சுற்றுலா டிக்கெட் இரண்டு வாங்கிக் கொண்டு கேபிள் காரில் ஏறி உட்கார்ந்தோம். அது மிக நல்ல அனுபவம். அன்புடையவர்களுடன் உயரத்தில் அமர்ந்து பயணம் செய்வது என்பது மறக்க முடியாத நிகழ்ச்சி என்று சொல்லலாம். பலமுறை அதுபோன்ற அனுபவம் கிட்டியிருக்கிறது. 6 மாதத்துக்கு முன்பு வரை ஒருவரை ஒருவர் அறிந்ததில்லை, அதன்பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு நெருக்கமாக ஒருவருடன் இனிய பயணம் என்பது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.
செந்தோசா தீவை சுற்றிப் பார்த்துக் கொண்டே மீண்டும் தொடரும் ... !
இன்று நவ 29, எஸ்கே ஐயாவுக்கு பிறந்த நாள் அதையும் இங்கு நினைவு அவரை கூர்ந்து வாழ்த்துகிறேன்.
மணி மாலை 7.30க்கு மேல் ஆகி இருந்தது. தூரத்திலிருந்தே கைகளை அசைத்தவர் நொடிப்பொழுதில் பாதுகாப்பு இடம் கடந்து அருகில் வந்துவிட்டார். நெருக்கமான உறவினர் நம்மைப் பார்க்க வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது உணர்வுகள். "ஐயா ! வாங்க வாங்க " என்பதை தவிர வேறு எதுவும் பேசும் முன்னும் அருகில் வந்து இரண்டுகைகளாலும் வளைத்து கட்டி அணைத்துக் கொண்டார். இருவருக்கும் இடையில் இருந்தது நட்பா, உறவா எதுவும் தெரியவில்லை. உணர்வுபூர்வமான ஈர்ப்பு, ஒருவரை ஒருவர் நேரிடையாக பார்பதில் மற்றற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள் ஆகியவை அணைத்து மகிழ்ந்ததில் உணர முடிந்தது. முன்பே தொலைபேசி வழி 'அப்பா' என்று இவரை என் மனைவி அழைத்து வந்திருந்தாலும், இவர் தோள் தொட, ஆதரவாக இவர் கை தொட்டதும் சென்ற ஆண்டில் திடீரென தன் தந்தையை இழந்திருந்த என் மனைவிக்கு அப்பாவையே உணர்வதுபோல், பார்பதுபோல் என் மனைவியிடம் நெகிழ்ச்சி இருந்தது. பயணவிவரம் கேட்டபடி எல்லோரும் வாடகைக் காரில் வீடுவந்து சேர்ந்தோம்.
எங்கள் வழக்கப்படி வீட்டுக்கு வரும் பெரியவர்களிடம் ஆசிவாங்குவதென்பது வழக்கம். அதன்படி உள்ளே வந்ததும் பூஜை அறைக்கு சென்று வணங்கி விட்டு வந்தவரிடம் தம்பதிகளாக காலில் விழுந்து ஆசி பெற்றோம். ஒரு சில நிமிடங்களில் எனது 6 வயது மகளுக்கு இவர் தாத்தாவாகிவிட இருவரும் வெகு நாட்கள் பழகியது போல் விளையாட ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே தொலைபேசி வழி தொடர்பு கொண்ட நண்பர் குழலி அவர்கள், மீண்டும் தொடர்பு கொண்டு உடனடியாக எஸ்கேவை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வருவதாக தொலைபேசி வழி தெரிவித்தார். அதன்படி அவருக்கு இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் குறித்து சொல்லிவிட்டு, நேராக அழைத்துவர குறிப்பிட்ட இடத்திற்கு சென்றோம். நண்பர் குழலி ஆப்பிள் பழங்களுடன் வந்தார். வீட்டிற்கு அழைத்து வந்து பேசிக் கொண்டிருந்தோம். எஸ்கேவும், குழலியும் விஜயகாந்த் மற்றும் பாமக அரசியல் பற்றி பேசினார்கள். அரசியலில் தன் நிலைப்பாடு என்ன என்பதை குழலி பேசினார். பின்பு தன் குடும்பம், ஊர் இவற்றைப் பற்றி பேசினார். ஒரு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு இரவு உணவை சாப்பிட ஆரம்பித்தோம். சோயா பைட்டில் செய்யப்பட்ட குருமா இருந்தது. எஸ்கே சோயா பைட்டை அழுத்தி அழுத்திப் பார்த்தார். ஒருவேளை எலும்பு எதாவது சிக்குமா என்று பார்த்திருப்பார் போலும். நாங்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்பது அவருக்கு தெரியும், இருந்தும் ஒரு எச்சரிக்கையாக சோயா பைட்டை அழுத்திப் பார்த்து திருப்தி பட்டுக் கொண்டார். அது குறித்து நான் கிண்டல் அடிக்க உணவு வேலை களைகட்டியது. இரவு உணவை முடித்துபின்பு விடைபெற்ற குழலி மறுநாள் தொலைபேசுவதாக சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு எஸ்கே தன்னுடைய மனைவிக்கு தொலைபேசியில் தான் சிங்கை வந்து சேர்ந்ததை தெரிவித்தார். இரவு 12 மணிக்கு மேலாக நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்துவிட்டு பின் இரவில் தூங்கச் சென்றோம்.
மறுநாள் காலை சிற்றுண்டியாக இட்டலியும், கிச்சடியும் முடித்துவிட்டு, வெளியில் சென்று சிங்கப்பூர் முக்கிய இடங்களைப் பார்க்கச் சென்றோம். காலை 11 மணிக்கு நான் முதலில் அழைத்துச் சென்றது லிட்டில் இண்டியா எனப்படும் நம்மவர்கள் இந்தியர் நிறைந்த இடம். அங்கு செல்லவதற்கே மணி 12க்கு மேல் ஆகிவிட்டது. அங்கு கோமள விலாஸ் என்னும் சைவ உணவகத்துக்குச் சென்று மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தோம். அப்பொழுது பதிவர் வடூவூர் குமார் அழைத்து மாலை 7 மணிக்கு அதே இடத்தில் சந்திப்பதாக சொன்னார். அதன்பிறகு வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே 3D சாமி படங்கள் (ப்ரேம்) Tushiv என்ற கடைக்குச் சென்றோம். அங்கு நவீன தொழில் நுட்பத்தில் செய்யப்பட்ட பல்வேறு கடவுள் உருவங்கள் இருந்தன. அவருக்கு பரிசு பொருளாக வாங்கிக் கொடுக்கவேண்டும் என்று தான் அங்கு அழைத்துச் சென்றேன். அவருக்கு அங்கு எல்லா உருவங்கள் பிடித்திருந்தாலும் எங்கும் கிடைக்கதற்கரிய ஒன்றாக அவருக்கு தோன்றிய, அற்புதமாக செய்யப்பட்ட சத்தியசாய் 3D ப்ரேம் ஒன்றை அவரே தேர்வு செய்து, அவரே கிரிடிட் கார்டு கொடுத்து வாங்கினார். அதில் உள்ள மின்விளக்கு அமெரிக்க வோல்டேஜ் அளவானா 110க்கு மாற்றவேண்டும் அதனால் மாலையிலோ அல்லது மறுநாளோ திருவுருவ ப்ரேமை தருவதாக கடைக்காரர் சொல்ல ரசீதைப் பெற்றுக் கொண்டு மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு வந்தோம்.
அதன்பிறகு விரைவு இரயில் எனப்படும் MRT யில் ஏறி லிட்டில் இண்டியாவில் இருந்து ஹார்பர் ப்ரெண்ட் எனப்படும் செந்தோசா தீவு முனையத்திற்கு வந்தோம். வெளியில் வந்து புதிதாக திறக்கப்பட்ட VIVO CITY என்ற பெரிய கடைவளாகத்தைப் பார்த்துவிட்டு அதற்கு முகப்பில் இருக்கும் நீர் அலங்காரத்திற்கு முன் புகைப்படம் எடுத்துவிட்டு நேராக செந்தோச தீவிற்கு செல்லும் கேபிள் கார் கட்டிடத்திற்கு வந்தோம். அங்கு விரைவு சுற்றுலா டிக்கெட் இரண்டு வாங்கிக் கொண்டு கேபிள் காரில் ஏறி உட்கார்ந்தோம். அது மிக நல்ல அனுபவம். அன்புடையவர்களுடன் உயரத்தில் அமர்ந்து பயணம் செய்வது என்பது மறக்க முடியாத நிகழ்ச்சி என்று சொல்லலாம். பலமுறை அதுபோன்ற அனுபவம் கிட்டியிருக்கிறது. 6 மாதத்துக்கு முன்பு வரை ஒருவரை ஒருவர் அறிந்ததில்லை, அதன்பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு நெருக்கமாக ஒருவருடன் இனிய பயணம் என்பது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.
செந்தோசா தீவை சுற்றிப் பார்த்துக் கொண்டே மீண்டும் தொடரும் ... !
இன்று நவ 29, எஸ்கே ஐயாவுக்கு பிறந்த நாள் அதையும் இங்கு நினைவு அவரை கூர்ந்து வாழ்த்துகிறேன்.