இன்றைக்கு தந்தையர் தினம். பெற்றோர் இருவரில் உயர்ந்தோர் யார் என்று சொல்லவே முடியாது. இந்த பதிவு...தந்தையின் மதிப்பை உணர்ந்தவர்களுக்கும்... தந்தையை இழந்து அவர்தம் நினைவை அசைபோட்டு நெகிழ்பவர்களுக்கும் சமர்பணம். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதி...சிங்கை தமிழ்முரசில் வெளிவந்த ஒரு கவிதை(முயற்சி)
அப்பாவுக்கு அப்பாவாக !
இருபதை கடந்த இளைஞனாய் இருந்த நான்
இல்லறம்கான திருமணம் செய்து வாழ்தினாய் நீ !
இனிய இல்லறம் நடத்திய உனக்கு
இன்னொரு அறுபதாம் திருமணம் செய்து வாழ்துப் பெற்றேன் நான் !
நடந்த என்கால்கள் மிதிவண்டி பழக
மிதிவண்டி வாங்கி வந்தாய் நீ !
நடந்த உன்கால்கள் தடுக்கி விழாமல் இருக்க
ஊன்றுகோல் வாங்கி வந்தேன் நான் !
தேழனாய் மாறி பாலன் என்னுடன்
பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்தாய் நீ !
தோழனாய் மாறி பழுத்த உன்னுடன்
பரமபதம், சோளி விளையாடி மகிழ்ந்தேன் நான் !
திருவிழாக்களுக்கும், கடைவீதிகளுக்கும்
அன்பாக தூக்கி சென்றாய் நீ !
திருக்கோவில்களுக்கும், கடற்கரைகளுக்கும்
அன்பாக அழைத்து சென்றேன் நான் !
அருகிலிருந்து அக்கறையாய் எனக்கு
அரிச்சுவடி சொல்லி கொடுத்தாய் நீ !
அருகிலிருந்து ஆர்வத்துடன் உனக்கு
அன்றாட செய்திகளை வாசித்தேன் நான் !
யானையாய் மாறி என்னை இடம் வலமாய்
தூக்கி சுமந்தது மகிழ்த்து, மகிழ்ந்தாய் நீ !
பூனையாய் மாறி உன்னை அங்கும் இங்கும்
தூக்கி அறைகுள் இடம் மாற்றி நெகிழ்ந்தேன் நான் !
தவழ்ந்தது போதும் என்று
தள்ளாடி தள்ளாடி எழுந்த நான்
தடுக்கி விழாமல் நடை பழக
தள்ளும் நடைவண்டி வாங்கினாய் நீ !
தளர்ந்ததால் உன் நடை
தள்ளாடி தள்ளாடி
தவழவும் நிலைக்கு வந்த போது
தள்ளும் சற்கர நாற்காலி வாங்கினேன் நான்!
எனக்கொரு குழந்தையாய் மாறினாய் நீ !
உனக்கொரு தந்தையாய் மாறிப் போனேன் நான் !
கருவறைவிட்டு வந்த என்னை,
ஆனந்த கண்ணீருடன், நெகிழ்ந்த இதயத்துடன்
கைகளில் ஏந்தி சென்றாய் நீ !
கல்லறைக்குள் விட்டு செல்ல உன்னை,
ஆ(ற்)றாத கண்ணீருடன், கனத்த இதயத்துடன்
தோள்களில் தூக்கி செல்கிறேன் நான் !
அன்புடன்
கோவி.கண்ணன்
இணைந்த கைகள் அந்திநேர தென்றல் காற்று....பாடலையும் கேட்டு மகிழுங்கள்
Sunday, June 17, 2007
Friday, June 15, 2007
சாதி விந்து !
நான் உயர்ந்தவன்,
நீ தாழ்ந்தவன் என்ற போராட்டம்
ஒரு புறம் நடந்து கொண்டிருக்க,
குழந்தை இல்லாதவருக்காக,
டெஸ்ட் டியூபில் சங்கமித்து
முத்தமிட வந்த
தாழ்ந்த சாதி விந்தை
உயர்சாதி கருமுட்டை
அன்பு மாறாமல்
ஏற்றுக் கொண்டது !
சாதிவேறுபாடுகள்
விந்திற்கோ, கருமுட்டைக்கோ
இல்லை !
அவை கூமுட்டைகளுக்கு மட்டுமே !
குறிசொற்கள்
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)