Thursday, July 12, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

முதல் அழு குரல்கள் !


பிணம் தின்னிக் கழுகுகள்,
கொடிய விஷப்பாம்புகள்,
தந்திர நரிகள்,
இவைகளெல்லாம்
மனித உருவில் நடமாடுவதைப்
பார்க்கப் போகிறேனே !

கொலைவெறி கண்கள்,
கழுத்தை இறுக்கும் கரங்கள்,
வீசருவாள், வேள்கம்பு, விஷநாக்கு
நடமாடும் மனித மிருங்கங்கள்,

இவர்களின் சாதி (கெடு)நிழலும்,
மத (அவப்)பெயரும் இனி விழப்போவது,
சுவர்க்க கருவறை விட்டு

விட்டு வரும் என்மீது தானா ?
நரகத்தை அறிந்தும், கள்ளங்கபடம் அற்றக்
குழந்தைகளின் குரல்வலையில்
இருந்து முதல் அளறல்கள் தான் கேட்கிறது !
எந்த ஒரு மகப்பேறு அறையிலும் !