Tuesday, March 20, 2012

தமிழ்மணம் கருவிபட்டை

கூடங்குளம் !


மயானங்கள் மனிதர்களுக்காக
மனிதர்களால் கட்டப்படுபவை தானே !

மின்சாரப் பஞ்சம் இனி இல்லவே இல்லையாம்,
மயானங்களுக்கு மட்டுமல்ல,
மனிதர்களுக்கும் சேர்த்தே,
திறக்கப்படும் மாபெரும் மின்சார சுடுகாடு !

Wednesday, March 14, 2012

தமிழ்மணம் கருவிபட்டை

நான் நம்பிக்கையாளன், ஆத்திகன் !

சக்தியுள்ள கடவுள் எது ? லாபம் தரும் கடவுள் எது ?
என்கிற எனது "கடவுள்" நம்பிக்கையில்
அவர்களது "கடவுள்" நம்பிக்கைகளை
நான் சேர்த்துக் கொள்வது கிடையாது
நான் என்னை "கடவுள்" நம்பிக்கையாளன் என்று
வெட்கமில்லாமல் கூறிக் கொள்வதில்
பெருமை படுகிறேன்.

நான் ஒரு கிறித்துவனாக இருந்தால்
மசூதிகள், கோவில்களின் கடவுளரை புறக்கணிப்பேன்

நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தால்
தேவாலயங்களும் கோவில்களும் சிலை வணங்கிகளின்
அபத்தங்கள் என்பேன்

நான் ஒரு இந்துவாக இருந்தால் என் நம்பிக்கைக்குரிய
ஆயிரம் சாமிகளில் அல்லாவும், ஜொஹோவாவிற்கும்
இடமில்லை என்பேன்

"எல்லாம் அவன் செயல்" "அவனே அனைத்தும் அறிவான்"
என்ற எனது திடமான நம்பிக்கைகளுள்
மாற்று மதங்களுக்கும், அவர்கள் தம் கடவுளரும்
அடங்காது. ஆனால் அவர்களையும்
எனது கடவுளே ஆளுமை செலுத்துகிறார், அழிக்க விரும்புகிறார்
என்ற என் நம்பிக்கையில் மாற்றமே இல்லை.

நம்புங்கள் நான் ஆத்திகன்... ஆத்திகன்
என்னுடைய கொள்கை சார்ந்த "கடவுள்" மட்டுமே
உண்டு என்பேன். கூடவே
"கடவுள்" நம்பிக்கையற்றவர்களை
நக்கல் அடிப்பவன் நான்.

"கடவுள் இல்லை" என்பவன் சிந்திக்க மறுப்பவன் அவன்
"நரக நெருப்பில் வாடுபவன்",
"உண்டு" என்று கடவுள் புகழ்பாடும் நான் "ஆசிர்வதிக்கப்பட்டவன், சொர்கவாசி
ஆகப்போகிறவன்"



**********

போங்கைய்யா நீங்களும் உங்க போங்கு ஆட்டமும்

அன்புடன் கோவியார்