Monday, October 30, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தேன்கூடு அக். போட்டி முடிவுகள் !



தேன்கூடு அக். போட்டியில் பங்குபெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த லக்கி லுக் (லக்கியார்), ஜி ராகவன்(ஜிரா), சுதர்சன் கோபால், மற்றும் நான்காம் இடம் பிடித்த கடல் கனேசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

போட்டி முடிவுகளை மேலும்
படிக்க...

எனது
விடுதலை சிறுகதைக்கு வாக்களித்தவர்களுக்கும், படித்தும் வயதுவராதால் வாக்களிக்க முடியாமல் தவிர்த்தவர்களுக்கும் நன்றிகள்.
:-)
தமிழ்மணம் கருவிபட்டை

பாமக - திமுக - தேமுதிக

எஃகு கோட்டை போல் உறுதியான கூட்டணி என்று திமுகவால் சொல்லப்படும் திமுக கூட்டணி, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு உலுத்துப் போன கூட்டனியாகிவிடும் போல் இருக்கிறது.

முதல்வர் கருணாநிதி விஜயகாந்தின் வளர்சியை பாராட்டிப் பேச, அதிமுக தலைமையில் சீறிய அறிக்கை தேமுதிகவின் தலைமையை உசிப்பேற்றி அவதூறுகள் இருப்பக்கமும் அரங்கேறி அடங்கியிருக்கிறது. தேமுதிகவை போட்டியாக நினைக்கும் அளவுக்கு அது ஒரு கட்சியே இல்லை என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை பேசிய பாமக. விஜயகாந்தின் விருதாசால வெற்றிக்கு பிறகு எதிரி கட்சியாக நினைக்க ஆரம்பித்து விட்டது எல்லோரும் அறிந்ததே.

கலைஞர் கூட்டணியுடன் உள்ளாட்சி தேர்தலை சந்தித்த பாமக, கலைஞரின் விஜயகாந்த் குறித்த பாராட்டு பேட்டியை சகித்துக் கொள்ள முடியவில்லை. நகராட்சி தேர்தலில் சில இடங்களில் தோற்றது பாமகவை முதலில் கவலை கொள்ள வைக்காவிட்டாலும், விஜயகாந்தை ஒரு பொருட்டாகவே நினைக்காத ஜெ-வே சீறி இருக்கும் போது விஜயகாந்தின் வளர்ச்சியை பாமகவால் ஊகிக்க முடிந்தது. a அது மட்டுமல்ல ஊடகங்கள் யாவும் விஜயகாந்தை நோக்கி திரும்ப, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக என்னும் செல்வாக்கு வரிசையில் அடுத்து இருக்கும் தங்கள் கட்சிக்கு சரிவாகிவிடும் என்ற கருதிய பாமக தலைமை திமுகவிற்கு எதிராக திடீர் அறிக்கை தாக்குதல் செய்து ஊடகங்களையும் திசைத் திருப்பி இருக்கிறது.

இந்த திடீர் அறிக்கை தாக்குதல் திமுகவிற்கு சங்கடமாக இருந்தாலும், விஜயகாந்தை பாராட்டி பேசியதற்காக பாமக கோபம் கொண்டுள்ளாத நினைத்து இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்ள விரும்புவதாக தெரிகிறது.

பாமக அவ்வளவு வேகமாக திமுக கூட்டணியில் இருந்து விலக முடியாது, அப்படி விலகினால் திமுக தலைமை காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்து சுகாதாரத்துறை மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியை கழட்டிவிடச் சொல்லும். ஐந்தாண்டுக்குள் பதிவையை துறக்க பாமக தலைமைக்கு விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை. பின்பு எதற்கு திமுகவிற்கு எதிரான அறிக்கை ?

1. தேமுதிகவில் மையம் கொண்டிருக்கும் ஊடகங்களை திசைத் திருப்ப, 2.திமுக கூட்டணியில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, 3. எதற்கும் எதிர்காலத்திற்காக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் மறைமுகமாக அதிமுக தலைமைக்கு சிக்னல்.
பாமக ஒரே ஒரு திடீர் அறிக்கையில் அடிக்க முயன்றது மூன்று மாங்கனிகள்.

Wednesday, October 25, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நாமெல்லாம் ஜந்துக்கள் !


இருப்பது இறப்பதற்கே என்று
நன்றாக தெரியும் !
சாம்பலாகும் முன் சாதி பற்று
இல்லாமல் இருப்போமா ?

எல்லோருடைய உதிரமும் சிவப்பு
என்பது நன்றாக தெரியும் !
தோலின் நிறம் பார்த்து
தூற்றாமல் இருப்போமா ?

இருபாலர் மூத்திரமும் உவர்ப்பே
என்று நன்றாக தெரியும் !
ஆண்(வர்க) குறி ஆணவம்
இல்லாமல் இருப்போமா ?

வியர்வையின் வீச்சமும், கழிவின்
துர்நாற்றமும் எல்லோருக்கும் உண்டு
பாமரரை பண்பாடற்றவர் என்று
பழிக்காமல் இருப்போமா ?

இறைவன் என்பவன் ஒருவனே
என்று நன்றாக தெரிந்தும்,
மாற்று மத இறைவனை
எள்ளாமல் இருப்போமா ?


இதையும் படிக்கலாம் -
ஆழியூரன்
தமிழ்மணம் கருவிபட்டை

ஆணவமற்றவர் ஜெ - தேமுதிகவினர் பாராட்டு !


ஆணவமற்றவர் (ஆணவம் கொண்டவர் அல்ல) என அம்மாவை பாராட்டியதுடன் நில்லாமல், அம்மாவுக்கு பிடித்த பச்சை நிறத்தில் போஸ்டர் அடித்து இருக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள் !

இது தெரியாமல் ஜெ - கேப்டன் லடாய் என்று திமுகாவினரும் தினகரனும் வதந்தி கிளப்பிவிடுகிறார்கள்!

படம் : நன்றி தினகரன்

Tuesday, October 24, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஆடு நனைகிறதே !

தீபாவளிக்கு கேப்டன் கேப்பாகத் தான் இருப்பார் என்று நினைத்தால் 'யானை* வெடி வெடித்து கலகலக்க வைத்துவிட்டார். மதுரை இடைத்தேர்தலில் பட்டாசு கொழுத்தியது சிறுதாவூர் பங்களாவில் புகையை கிளப்பிவிட்டது. ஏற்கனவே ஆட்சியை இழந்து இடைத் தேர்தலில் எம்ஜிஆர் வாக்குகளையும் கனிசமாக இழந்ததால் அதிமுக தலைமை விஜயகாந்த் மீது அக்கினியை கக்கியுள்ளது.

விஜயகாந்த் தான் அரசியலில் 'எண்ட்ரி லெவல்' என்பதை மெய்பிக்கும் விதமாக பண்பாடற்ற முறையில் தனக்கு ஊத்திக் கொடுப்பவராக இருந்தால் விமர்சிக்கலாம் என்பது போல் பதில் அறிக்கை அனுப்பி அனைவரையும் பம்பர சாட்டையை வைத்துக் கொண்டு இப்படி விளாச முடியுமா ? என்று வியப்படைய வைத்துவிட்டார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ...!

அதுவா விசயம் ? இல்லை ! இதை திமுகவும் மற்றவர்களும் எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் விசயம். இடைத் தேர்தலுக்கு பின் இதமோடு முதல்வர் கருணாநிதி குளிர்வாக விஜயகாந்தை பாராட்டி பேட்டி அளித்தது ஜெ-வை மிகவும் எரிச்சலடைய வைத்தது. இதன் காரணமாக தோல்வியின் காரணங்களை ஆராய்ந்த ஜெ. கேப்டன் தன்னை தானே கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி பாமர மக்களை நம்ப வைத்தே வாக்குகளை அறுவடை செய்ததாக கொதித்து எழுந்து ஆவேச அறிக்கை வெளியிட்டார்.

முதல்வர் கருணாநிதி தன் ராஜா தந்திரத்தின் மூலன் இதை சாதித்து இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது அவருக்கு புதிதல்ல. சன் டீவியில் ஜெ - கேப்டன் மோதலை ஹைலைட் செய்து 3 முறை செய்தி வெளியிட்டதன் மூலம் திமுகவின் நோக்கம் தெரிகிறது. இனி பரபரப்பு நபராக விஜயகாந்தை ஆக்குவதின் மூலம் ஜெ வையும், அதிமுகவையும் பலமிழக்க செய்வதுதான் திமுகவின் திட்டம்.

ஜெ இதை எப்படி அணுகுவார் என்பது அடுத்த தேர்தலில் தான் தெரியும். தன்னை தூற்றியவர்களுடன் கூட்டனி அமைத்ததும அம்மையாருக்கு ஒன்றும் புதிதல்ல என்பது வைகோ விசயத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். எனவே வருங்காலத்தில் ஜெ - கேப்டன் கூட்டணி அமையாது என்று திமுக கணக்கு போடுமானால் அது சென்றகாலத்தில் வைகோ- ஜெவை வைத்து போட்ட கணக்கு போல தப்பாகத் தான் போகும். திருமா, பா.ம.க போன்ற தனித் தாக்குதல் நடத்திய கட்சிகளுடன் பல்வேறு காலகட்டங்களில் ஜெ கூட்டனி அமைத்து இருக்கிறார் என்பதை நினைவு கொள்ளலாம்.

இதையெல்லாம் புரிந்து கொண்டாரோ என்னவோ கேப்டன் ஒரே நாளில் பல்டி அடித்து 'பொது எதிரி திமுகவை வீழ்த்துவதுதான் லட்சியம், திமுக திசை திருப்புவதை தேமுதிக அலட்சியம் செய்யும்' என்று முழங்குகிறார். ஆனால் எதும் தெரியாத தொண்டர்கள் ஜெவின் உருவ பொம்மைக்கு தீவைத்து மகிழ்கின்றனர்.

இவையெல்லாம் புரிந்தும் புரியாதது போல் ஒரு கூட்டம் திராவிட அரசியலே சாக்கடை என்று சந்தடி சாக்கில் ஜல்லி அடிப்பது தொடர்வதையும் இடைப்பட்ட காலத்தில் எல்லோரும் கேட்டு மகிழலாம்.
தமிழ்மணம் கருவிபட்டை

ஜெ - கேப்டன் !

ஒருவர் பெரிய ஆள் ஆகவேண்டுமா ? அல்லது பொதுமக்களிடம் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமா ? எல்லோருடைய கவனத்தையும் கவர வேண்டுமா ? அரசியல் வாதிகள் நமக்கு சொல்லித் தருவது மாற்றுக் கருத்து உடையவரை தூற்றுவது.

தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகாலமாக நடந்துவருவது இது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் காமராஜர் தூற்றப்பட்டார். ஆனால் விமர்சனங்கள் கீழான நிலையில் இல்லை. ஆனால் இன்றைய அரசியலில் நடப்பதோ கேடுகெட்ட செயல்கள்.

தான் வளர மாற்றுக் கருத்துடையவரை மட்டமாக விமர்சிப்பது என்ற ஒரு வழியையே தமிழக அரசியல் வாதிகள் பயன்படுத்துகிறார்கள், உதிர்ந்த ரோமம், வைப்பாட்டி , கூவத்தில் தூக்கி எறிவேன் என்ற ரீதியில் பண்பாடற்ற வசை மொழிகளால் விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்.

புதிதாக கட்சி ஆரம்பித்த கேப்டன் விஜயகாந்த் அதற்கு தானும் விதிவிலக்கு அல்ல என்பது போல் தன்னை குடிகாரன் என்று மறைமுகமாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாவை ஒரு மூத்த அரசியல் வாதி, மும்முறை முதல்வராக இருந்தவர் என்றும் பாராமல் 'எனக்கு பக்கத்தில் இருந்து ஊற்றி கொடுத்தாரா ?' என்று எதிர் கேள்வி எழுப்பியிருக்கிறார். தான் தமிழகத்தின் விடிவெள்ளி என்று கூறி வாக்கு அறுவடை செய்யும் இவர் மாற்று அரசியல் கட்சித் தலைவர்களை பண்பாடற்ற முறையில் விமர்சிப்பது இவருக்கு வீழ்ச்சியைத் தரும். முன்பு போல் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு ஓட்டு போடுவதில்லை. பேச்சின் தராதரம் பார்கின்றனர். வைகோ விசயத்தில் மக்கள் அவரை புறக்கணித்ததையும் கவனத்தில் வைத்துப் பார்க்கும் போது புதிதாக அரசியலில் நுழைந்த விஜயகாந்த் அடக்கி வாசிப்பது அவருக்கும் அவர் கட்சிக்கும் நல்லது.

மிடாஸ் போன்ற சரக்கு கம்பெனிகளை நடத்துபவர் என சொல்லப்படும் சசிக்கு தோழியாகவும், தொழில் முறை பார்ட்னராகவும் இருக்கும் ஜெயலலிதா குடிப்பழக்கத்தை அரசியலில் பயன்படுத்துவதும் வெட்கக் கேடு!


அண்ணாவின் திராவிடக் கட்சி வாரிசுகள் என தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் கட்சிகளுக்கு பொறுப்புணர்வான கடமையோ, நடத்தையில் கண்ணியமோ, வாக்கில் கட்டுப் பாடோ எதுவும் இல்லை ! ஆனால் இவர்கள் யாவரும் வெட்கமில்லாமல் மேடையில் மட்டும் முழங்குகின்றனர்.

Sunday, October 22, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

காட் பாதர் (திரை விமர்சனம்)

அஜித் - கே எஸ் ரவிக்குமாரின் கூட்டணியின் மற்றொரு படம். ஒரு தலயின் ஆட்டமே தலையை கிறுகிறுக்க வைக்கும், இதில் அப்பா - இரட்டை மகன்கள் என்று மூன்று தல. இரட்டை மகன்களில் ஒருவரை வேறுபடுத்திக் காட்ட நீல நிற விழியில் ஒருவரை காட்டுகிறார்கள் (என்ன லாஜிக்கோ).

கதை ... கதை வழக்கமான கொத்து புராட்டா. அம்மா சொண்டி மண்டு + அப்பா செண்டி மண்டு சேர்த்து கொத்திய காரம் குறைவான புரோட்டா.

அஜித் பஞ்ச் டயலாக் கொஞ்சம் குறைவுதான். தல அஜித்தை விட அசின் வரும் காட்சிகளில் தியேட்டரில் விசில் தூள் பறக்குது. (நான் பார்த்த திரையரங்கு சிங்கப்பூரை ஒட்டிய மலேசிய நகரான ஜோகூர்பாரு) அசினுக்கு கூடிய விரையில் தமிழ் ரசிகர்கள் சன்னிதானம் அமைப்பார்கள் என்று நினைக்கிறேன்.

படத்தில் முக்கியமாக வருவது ப்ளாஸ் பேக் காட்சிகள். அஜித் பரதநாட்டிய கலைஞராக வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்லலாம். அவருக்கு அந்த பாத்திரம் சிறப்பாக பொருந்தியிருக்கிறது. நடை உடை பாவனைகளில் ஒவ்வொன்றையும் மனுசன் அபிநயத்தோடு செய்து அசத்தி காட்டி கைதட்டல் பெறுகிறார். அதுதான் கதைக்கு காராணமே (கரு). முழு கதையை சொல்லிவிட்டால் பின்பு படம் பார்க்கும் போது ஆர்வம் இல்லாமல் போய்விடும்.

ரகுமானின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாக இருந்தது. இசையில் ஹிந்துஸ்தானி வாடை கொஞ்சம் அதிகம். அம்மா செண்டி மண்டு பாடல் ரகுமானுக்கு சமீபகாலங்களில் நன்றாக வருகிறது. அம்மா பாடல்களுக்கு தயாரிப்பாளர்கள் இனி ஏ.ஆர் ரகுமானை நாடலாம்.

அஜித் - அசின் இருவருக்கும் காதல் உருவாகும் காட்சி எதார்த்தமாக எடுத்து இருக்கிறார்கள். முழுப் படத்திற்கும் அசின் ஊறுகாய் அளவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சண்டை காட்சிகள் ஒன்றைத் தவிர மற்ற இரண்டு சண்டைக் காட்சிகள் அஜித் - அஜித் மோதுவதாக படமாக்கியிருக்கிறார்கள். படம் முடிந்து வெளியே வருகையில் அப்பா அஜித் தவிர மற்ற அஜித்கள் நினைவில் நிற்கவில்லை. கே.எஸ்.ரவிகுமார் முன்பு இந்த கதை சூப்பர் ஸ்டார் நடிப்பதற்காக சொல்லப்பட்ட கதை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் ( சூப்பர் ஸ்டார் தப்பித்தார்) .

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு காட் பாதர் அட்டகாசம், அமர்களம், சரவெடி

பொழுது போக்கிற்கு போகிறவர்களுக்கு 'ஓ மை காட்', புஷ்வானம்

Saturday, October 21, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தீபாவளியின் புராணங்கள் எதுவாக இருந்தால் என்ன ?






தீபாவளியின் புராணங்கள் எதுவாக இருந்தால் என்ன ?
ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது
ஆரவார தீபாவளி !

புத்தாடை மத்தாப்பு மட்டுமின்றி
மகிழ்வைக்கிறது தீபாவளி !

எந்த ஆண்டாக இருந்தாலும்
ஏதோ ஒருவிதத்தில் கொண்டாட்டம் !

சிலருக்கு சிறப்பாக இருவருக்கும்
ஒன்றாக ஆகிவிடும் தலைதீபாவளி !

புதிதாய் பெற்றோரானவர்களுக்கு புதிய
உறவுடன் பிறந்திடும் தீபாவளி !

வளரும் குழந்தைகளுக்கும் தம் புதிய
உடன்பிறப்புடன் பிறந்திடும் தீபாவளி !

புதிதாய் நண்பர்கள் கிடைத்திட்ட அனைவரின்
நட்பை மலரவைக்கும் புது தீபாவளி !

தீபாவளி ஒரு தத்துவம் என்கிறர் சிலர் !
தீபாவளி ஒரு பக்தி வரலாறு என்கிறர் சிலர் !
தீபாவளி தமிழரருக்கு தேவையில்லை என்கிறர் சிலர் !

தீபாவளியின் புராணங்கள் எதுவாக
இருந்தால் என்ன ?

கொண்டாடுபவரை வாழ்த்தவும்,
கொண்டாடுபவர்கள் மகிழவும்,
மற்றொமொரு ஆங்கில புத்தாண்டு போல்
அனைவரும் சேர்ந்து மகிழ ஒரு
இந்திய பண்டிகை நம் தீபாவளி !

Thursday, October 19, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தமிழக கட்சித் தலைவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி !


முதல்வர் கருணாநிதி : என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே. நாசக்காரார்கள் ஒடுங்கிவிட்டார்கள். நாடு காப்பற்றப்பட்டு விட்டது. நகராட்சித் தேர்தலிலும், இடைத் தேரிதலிலும் தோல்வியைத் தந்து ஏமாற்று வித்தைக் காரார்களை புறமுதுகுடன் ஓடவைத்து விட்டீர்கள். அண்ணாவும், பெரியாரும் காட்டிய வழியில் கழகத்தின் நல்லாட்ட்சி நடக்கிறது. ஏழைகள் தீபாவளிக்கும் பொங்கல் செய்வதற்காக இரண்டு ரூபாய் அரிசி திட்டம். பட்டாசு மட்டும் வெடித்தால் போதுமா ? படக் காட்சி காண வேண்டாமா ? இலவச வண்ணத் தொலைக் காட்சியில் ஏழைகளின் கண்கள் சிரிக்கின்றது. ஊக்க போனஸ் உயர்ந்ததில் அரசு ஊழியர்கள் தூக்கத்தை மறந்து உற்சாக மடைகின்றனர். காவல் துறை மீண்டும் கண்ணியத் துறை ஆகிவிட்டது. தமிழில் பெயர்வைத்தால் வரி இல்லை என்பதால் திரைத்துரையின் மறைவு காப்பாற்றப் பட்டுவிட்டது. கேடுகெட்ட நாசக்கார கும்பலை வதைத்த இந்த தீபாவளி உண்மையில் நல்ல தீபாவளி. கழக கண்மணிகளின் கண்களில் ஒளி, தமிழக மக்களின் முகத்தில் தீப ஒளி இது அத்தனையும் கழக ஆட்சியில் என்றுமே இருக்கும் என்பதை கூறிக் கொண்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா : ரத்தத்தின் ரத்தமான கழகத்தினரே, அன்பு தமிழக மக்களே. புரட்சித்தலைவரின் புனித ஆட்சியை புரட்டுக் காரட்கள் சூழ்ச்சியால் வீழ்த்திவிட்டார்கள். நரகாசூரர்கள் ஆட்சி நடத்தும் கலிகாலம் ஆகிவிட்டது தமிழகம். கருணாநிதியின் சிறுபாண்மை அரசு கூடிய விரைவில் கவிழ்வது என்பது நிஜமே. புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமையும் என்பதை அண்ணாவின் மீது ஆணையிட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது துரோகிகள் நம்மிடம் இல்லை, அன்பு அண்ணன் உள்ளார். சென்ற தீபாவளிக்கு நான் இனிப்பான செய்தி தந்தது போல் இந்த கருணாநிதியால் தரமுடியுமா ? காவல் துறையை ஏவல் துறையாக்கி தமிழகத்தை பீகார் ஆக்கிவிட்டார்கள்.
தேர்தல் வரும் போகும், வெற்றி என்பது கருணாநிதி குடும்பத்தினருக்கு நிறந்தரமல்ல. அனைத்து தமிழக மக்களுக்கும் அம்மாவின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.



விஜயகாந்த் : தருமம் ஜெயக்கனும், அதர்மம் அளீயனும். காஷ்மிர் முதல் கன்யாகுமரி வரை உள்ள ஒவ்வெரு தமிளனும் தலை நிமிரனும். இன்னிக்கு 8 % ஓட்டிலிருந்து 18 % வந்திருக்கோம் என்றால் அது தமிள், தமிளன் நம் கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. முடியாது என்று நம்மை பார்த்து இளித்தவர்கள் இன்று மோத பயப்படுகிறார்கள். குடிதாங்கிகளளை தாக்கும் இந்த மின்னலை சமாளிக்க அவர்களிடம் இடிதாங்கி இல்லை. தேமுதிக தமிள் நாட்டை ஆள்வது உறுதி என்றாலும் அது நம் லட்சியமல்ல. தமிளன் இந்தியாவை ஆளவேண்டும். அதற்கு சென்னை முதல் கன்னியாகுமரிவரை உள்ள அனைத்து தமிளர்களும் ஒத்துளைத்து உறுது பூண்ட வேண்டும். தீவிரவாதம் என்னும் சொல்லே தமிளில் ஏன் இந்தியாவில் உள்ள எந்த மொளியிலும் இருக்கக் கூடாது. இப்பெல்லாம் தமிளில் எனக்கு பிடிக்காத வார்த்தை கருணாநிதி. தமிளர் அனைவருக்கும் தீபாவளி வாள்த்துக்கள்.

பி.கு : எல்லாம் கற்பனை தாங்க ! கட்சிக்காரங்க யாரும் வூடு கட்ட வந்திடாதிங்க !

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

Tuesday, October 17, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஆத்திகமும் நாத்திகமும் !


ஆடையின்றி பிறந்தது போல்
ஆத்திகராக பிறக்கவில்லை எவரும் !
பெயர் வைப்பதில் காதில்
ஓதி துடங்கிய மதபோதனையை
அறிவற்று இருந்த அந்த வயதில்
கேட்டவுடன் தொடங்குகிறது
ஒருவரிடம் ஆத்திகம் !

தேடலின்றி திருப்திப் பட்டு,
முடங்கி விடுகிறது
ஆத்திகம் !

தேடி அறிய துடித்து,
கேள்வியில் நிற்கிறது
நாத்திகம் !

நம்பிக்கை மீது கட்டப்பட்டுள்ள
எந்த கொள்கையும்,
கேள்விக்கும் உரியது
கேலிக்கும் உரியது !

உண்மையான ஆத்திகன் என்பவன்
நாத்திகனே !
அவனே மெய்யையும் (உடல்)
மெய்யையும் (உண்மை) உணர்ந்தவன் !

உண்மையான நாத்திகன் என்பவன்
ஆத்திகனே !
அவனே தன்னையும், தன்னைப் போல்
பிறரையும் உணர்ந்தவன் !
தமிழ்மணம் கருவிபட்டை

இருள் !



ஏதுமற்ற இருண்ட வானத்தை
ஒரு நாள் அண்ணாந்து பார்த்து,
இவ்வளவு பெரிய வானமாக இருந்தும்,
எல்லாம் சூனியமே என்று நினைத்தபோது
என் நீண்ட நினைவை கலைப்பது போல்
தோன்றியது அங்கே பிறைநிலவு !

நம்பிக்கை இன்மைக்கு என்ற கார்
இருளுக்குப் பின் எப்போதும்
இரவில் ஒரு அமாவாசை நிலவு போல
நம்பிக்கை மறைந்துதான் இருக்கிறது.

நம்மை சூழ்ந்த இருள் என்பது
ஒரு தற்காலிகம் என்று நம்பிக்கை வைத்து
உணர்ந்து கொள்ளும் போது
பிறை நிலாவாய் நம்பிக்கை
துளிர்விட்டு நம்பிக்கை
ஒளி வளர்ந்து பரவுகிறது !

Saturday, October 14, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நகராட்சித் தேர்தல் - நரகாசூரன் அவதாரம் !


பச்சை அம்மா நரகாசூரன் வதம் செய்வேன் என்றதை
மஞ்சள் துண்டு அய்யா ஏற்றுக்
கொண்டு அவதாரம் எடுத்து இருக்கிறார்
நகராட்சித் தேர்தலில் நரகாசூரனாக !

அன்றும் இன்றும் காவல் பூனைகளின்
கைதடிகளில் நசுங்குகிறது, நடுங்குகிறது
ஜனநாயகம் !

காராத்தே கைகளின் வழி அன்றும் இன்றும்
அதே தேர்தல் காட்சி !

கட்சிகளின் பெயரில் வெட்டிக் கொண்டாலும்
சிந்துவது தமிழன் இரத்தம் தானே !
பலிவாங்குவதற்கு என்றே தோற்றவருக்கு
அடுத்த தேர்தலில் வாய்பை
நாம் கொடுக்காமல் போய்விடுமோ என்ன ?

கருப்பாய் தோல் இருப்பதால் தமிழனுக்கு
சிறுமை இல்லை என்றும் !

தோல் தடித்துக் கொண்டே போவதல்,
சுரணையற்று போவதால் இழுக்கும்,
இழப்பும் உண்டு !

சிந்தீப்பீர் தமிழர்களே !
தேர்தல் காலம் தவிர்த்தும் !

Friday, October 13, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

இவர்களே கோமாளிகள் !

சிறில் அலெக்ஸ் அவர்கள் கொடுத்த கோமாளிகள் தலைப்புக்காக எழுதிய ஆக்கம் !

இவர்களே கோமாளிகள் ...!

ஆடுகள் கொம்புவைத்திருக்கும்
அகம்பாவத்தில் அடித்துக் கொள்கின்றன !
பலம் உள்ளவரை மோதிப்பார்பது
என்று ஆடுகள் முடிவெடுத்து
தர்ம அதர்ம யுத்தம் நடத்துவதாக
தனக்கு தானே சொல்லிக் கொள்கின்றன !

ஆடுகள் இரத்தத்தில் விரும்பிக்
குளித்துக் கொண்டு இருப்பதைப்
பார்த்து ஆடுகள் பாவம்
என்ற சமாதான தூதுவர்களை
ஆடுகள் புரிந்து கொள்ளுமா ?
அவற்றிற்கு தான் ஆறாவது
அறிவு கிடையாதே !

ஆடுகளுக்காக தூதுபோனவர்களின்
கெதி ?

அடித்துக் கொண்டு இரத்தம் சொட்டும்
ஆடுகளை வேடிக்கைப் பார்கிறவர்கள்
மெளனமாக சிரிக்கின்றனர் ஆனால்
ஆடுகளைப் பார்த்து அல்ல !
ஆடுகளுக்காக தூதுபோனவர்களைப்
பார்த்து, ஆடு நினைவதைப் பார்த்து
அழும் ஓநாய்கள் என்று !

ஆடுகள் கோமாளிகள் அல்ல !
வேடிக்கைப் பார்பவர்களும்
கோமாளிகள் அல்ல !
ஆடுகளுக்காக தூதுபோனவர்களே
கோமாளிகள் !

Thursday, October 12, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மெய் ஞானம் !



மெய் ஞானம் !

எல்லாவற்றிலும் எனக்கே
உரிமையுள்ளது,
நானே உயர்ந்தவன்,
என்று இறுமாப்பு
கொண்டு,
அடுத்தவரை
எள்ளி நகையாடி
எட்டி உதைக்கும் கால்களுக்கும்,
தள்ளிவிடும் கைகளுக்கும்,
சுட்டு உமிழும் நாவிற்கும்
ஏன் தெரியவில்லை ?
காலன் வந்து
கதைவை அடைத்துவிட்டால்,
தன் உடலை தான்
பயன்படுத்துவதற்கே
அடுத்து ஒருவிநாடி கூட
அவகாசம் கிடைக்காது
என்ற மெய்(உடல்) ஞானம் !
தமிழ்மணம் கருவிபட்டை

நம் வீட்டில் நமக்கு தெரியாதது !



நம் வீட்டில் நாம் இருக்கிறோம், நம்முடைய பொருள்கள் இருக்கிறது. கூடவே கரப்பான் பூச்சிகள், பல்லிகள் வசிக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்துதான் நாம் நம் வீட்டில் வசிக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

சில சமயம் நம் வீட்டில் உள்ளவர்களை (பொருட்கள்) உடனடியாக கண்டுபிடிக்க முடியாது. நகையும், பணமும் வைத்திருக்கும் இடம் மட்டும் நன்றாக தெரிந்து இருக்கும். மற்றவைகள் இருக்கும் என்பது தெரியும் ஆனால் தேடினாலும் சமயத்திற்கு கிடைக்காது.

அவசரத்துக்கு தொலைபேசி எண் குறித்து வைக்க ஒரு பேனா தென்படுவதே பெரிய விசயம், மற்றவைகளை சொல்லவும் வேண்டுமா ?

சில பொருள்கள் வீட்டில் இருந்தாலும் அதன் இருப்பை அறியாமல் பாதுகாப்பாக எங்கோ இருப்பதால், இரண்டாவது முறையாக வாங்கி வரும் நிலைமை ஏற்பட்டுவிடுவது பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் நடப்பதே.

அந்த அந்த அறையில் இருக்க வேண்டிய பொருள்கள் பெரும்பாலும் இடம் மாறியே இருக்கும், சமையல் அறையில் இருக்கும் பாலித்தீன் பையை வெட்டும் கத்திரி என்றோ செய்தித் தாள் வெட்டச் சென்றது திரும்பாது. அடுத்த நாளோ வேறு நாளோ தேவைப்படும் போது தான் அதன் ஞாபகம் வரும். தேடி எடுப்பதில் நேரவிரயம், தேவையில்லாத டென்சன் இவைதான் மிஞ்சும்.

நம் வீடு நம்முடைய பொருள்களுக்கான இடம் ஆனால் இவைகள் எங்கு எங்கு இருக்கிறது என்று நமக்கே தெரியாமல் இருப்பது பெரும் கவனக் குறைவு. இவற்றை சரி செய்யமுடியும். வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒரு முறையோ வீட்டில் உள்ள பொருள்களை ஒழுங்கு படுத்துவது / பராமரிப்பது நமக்கு பயன் தரும்.

எனக்கு தெரிந்த சில நடைமுறைகளை பட்டியல் இடுகிறேன்

1. தேவையில்லாத பொருள்களை கணக்கிட்டு அகற்றவேண்டும் அல்லது அவற்றை ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவோருக்கு அளிக்கலாம். என்றுமே பயன் ஆகாத பொருட்களை தூக்கிப் போடலாம்.

2. பொருள்களுக்குரிய இடம் என்று அமைத்து அதே இடத்தில் அதே வகையான பொருள்களை வைக்கலாம். சமையல் அறைக்கு பயன்படும் கருவிகள் சமையல் அறையிலேயே வைப்பது, இரும்பு தளவாடங்களுக்கு ஒரு இடம், மின்சாரம் சம்பந்தப்பட்ட எக்ஸ்டன்சன் பாக்ஸ் , டெஸ்டர் போன்றவற்றிக்கு ஒரு இடம், ஸ்டேசனரி பெருள்களுக்கு, படித்த கடிதங்கள் மற்றும் படிக்காத கடிதங்கள் போன்ற வற்றை தனித் தனியாக வைக்கலாம்.

3. அந்தந்த அறையில் தனித் தனியாக சிறிய குப்பைத் தொட்டி வைப்பது நலம், ஒரு வேளை எப்போதாவது குப்பையை கிளர வேண்டுமென்றால் சில குறிப்பிட்ட குப்பையை கிளரினாலே தேடிய பொருள்கள் எளிதில் தன்மை மாறாமல் கிடைக்கும்.

4. அன்றாட குப்பைகளுக்கு தனி இடமும், படித்த செய்தித்தாள் போன்றவைகளுக்கு தனி இடமும் இருந்தால் பயன்.

5. அடைக்கப்பட்ட உணவு பொருள்களை பயன்படுத்தும் முன் பயன்படுத்தும் தேதி முடிந்துவிட்டதா என்று பார்க்கவேண்டும். முடிந்து இருந்தால் உடனே அகற்றப் படவேண்டும். அடிக்கடி கெட்டுப் போகப் கூடிய சமையல் பொருள்களை தனியாக வைத்திருந்தால் உடனடியாக அடையாளம் காண முடியும்.

6. தினமும் பயன்படுத்தும் பொருள் சற்று தேவைக்கு அதிகமாக வைத்திருக்க வேண்டும். சோப்பு, உப்பு, பற்பசை போன்ற பொருள்களை ஒன்றாவது அதிகம் வாங்கி வைத்திருந்தால் நல்லது. இதனால் பற்பசையை கடைசி வரை பிதுக்கி எடுத்துவிட்டு ஒரு நாள் அவசரத்திற்கு வேறு வழியின்றி வெறும் ப்ரெஸ்சையோ, கைவிரலையோ பயன்படுத்துமாறு அமைந்துவிடாது.

7.பொருள்களை அவை வைத்திருக்கும் இடத்துடன் குறித்து பட்டியலாக வைத்து இருந்தால் தேடி எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்.

8. பிளாஸ்திரி, தலைவலி, சுரம், அஜீரனம், இருமல் போன்றவைகளுக்கு பயன்படுத்தும் மருந்துப் பொருள்கள் தேவைக்காக வாங்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும், குறிப்பிட்ட இடத்தில் வைத்திருந்து முடிவு தேதி பார்த்து பயன்படுத்துதல் நலம்.

9. விருந்தினர்களின் பயன்பாட்டிற்கு தனியாக புதிய சோப், டவல் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

10. எடுத்தப் பொருளை பயன்படுத்திய பிறகு எடுத்த இடத்தில் வைத்தால் அடிக்கடி தேடவேண்டிய அவசியம் இருக்காது.

பின்குறிப்பு: வீட்டுக்குறிப்பு எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்து எழுதிவிட்டேன். படிக்கும் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த வீட்டு பராமரிப்பு குறிப்புகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்

Sunday, October 08, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

உடல் உறுப்புகள் புனிதம் அடையுமா ?



வயிற்கு உணவில்லை என்றால்
ஜெகத்தினை அழித்திட
துணியாமல்,
உதிரத்தை விற்ற உழவன்
ஒருவனின் உதிரம் புனிதம்
அடைந்தது !

ம்...
உதிரம் சென்றது உயர்ந்தவர்
உடலுக்குள் ஆயிற்றே !

மாநகர தொழிலாளி
மானத்துடன் வாழ்வதற்கு
அவனிடம் இருந்த
மற்றொரு கிட்னியை
மகிழ்வுடன் விற்றான் !
அதே கிட்னி, சேர்ந்த இடம்
உயர்ந்தவரிடம்,
உயர்ந்தவர் சிறுநீரையும்
நன்றாகவே சுத்தம் செய்கிறதாம் !

பி.கு : நண்பர் சிவபாலன்
எலும்புக் கூட்டை வைத்து நல்ல செய்தி சொல்லியிருந்தார். அதன் பாதிப்பில் ஏற்பட்டது இது !

ஒரு டிஸ்கி :
உயர்ந்தவர் : உழைப்பால் உயர்ந்தவர் என்று எடுத்துக் கொள்க !

Saturday, October 07, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பரிணாமம், இந்துமதம், சிறில் அலெக்ஸ்

அருமை நண்பர் பதிவர் சிறில் அலெக்ஸ் பதிவு ஒன்றில் இந்துமதம் பரிணாமம் குறித்து என்ன சொல்கிறது என்று கேட்டு இருந்தார்.

இதற்கு பதில் சொல்வது சிரமம். முதலில் இந்து மதம் ஒரே கொள்கை உடையதா ? என்று பார்க்கவேண்டும்.

இந்து மதம் ஒரே கொள்கை உடையது அல்ல. பாரதத்தில் வழங்கி வந்த பல சமயங்களை 18 நூற்றாண்டுவரை இந்துமதம் உள்வாங்கி வந்திருக்கிறது. அதற்கு முன்பு தனி மதமாக அடையாளம் காணப்படவில்லை. சனாதன தர்மம், சைவம், வைணவம், வேத மதம் போன்ற தனித் தனி சமயங்களாக இருந்து வந்தது அதுபோல் காலத்தின் கட்டாயத்தின் பேரில் புத்தமதக் கொள்கைகள் எதிர்க்கும் பலி இடுதல் போன்றவற்றையும் உள்வாங்கிக் கொண்டது. ஆங்கிலேயர்கள், மற்றும் முகலாயர் மன்னர்கள் மூலமாக பின்னாளில் இந்துமதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.

எனவே ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பொதுவான வேத நூல்கள் இல்லை ! பகவத்கீதையை சைவர்கள் உயர்ந்த வேதமாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்துமதத்திற்கான வேதப் புத்தகம் கீதை என்று நீதிமன்றங்களில் பயன்படுத்தும் அளவுக்கு தான் பகவத் கீதை பொதுவானதாக இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய இந்துக்கள் பகவத் கீதையை வெறுக்கவே செய்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. புத்த மதத்திலும் ஹீனயானம் மகாயானம் என்ற இருபிரிவுகள் உண்டு.

எனவே இதுதான் பரிணாமத்தைப் பற்றி இந்து மதம் சொல்கிறது என்று எவரேனும் காட்டினால், இந்து மதத்தை சேர்ந்தவர்களே அதை மறுப்பார்கள். பிற்போக்கான மதப்பற்றாளர்கள் மட்டும் இந்து மதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று இந்துமதம் சொல்வதுதான் சரி என்று சொல்வார்கள். பெரும்பாலோனர் இந்து மதத்தில் பின்பற்றுவது குல தெய்வவழிபாடே. பகவத் கீதையையோ, சைவ சித்தாந்தங்களையோ, வேறு எதையோ யாரும் அளவுகோலாக எடுத்துக் கொண்டு மதத்தை பின்பற்றுவதில்லை.


பொதுவாக பெருவாரியான இந்துக்கள் சொல்வது கலியுக முடிவில் கல்கி அவதாரம் வரும். அத்துடன் உலகம் முடிவுக்கு வருவதில்லை. புதிய உலகம் பிறக்கும். அது சொர்க்கம் என்றெல்லாம் சொல்லப்படுவதில்லை. அது ஒரு பிரளையம் என்கிறார்கள் திரும்பவம் சத்திய (தங்கம்) யுகம், திரேத(வெள்ளி) யுகம், துவாபர (செம்பு) யுகம், கலி (இரும்பு)யுகம் என தொடங்கும், மறுபடியும் பிரளயம். உலகம் கெட்டுப் போகும் போது அதாவது கலியுகத்தில் கல்கி அவதாரம் வருமாம். அதைத் தான் சம்பவாமி யுகே யுகே ! யுகங்கள் தோறும் நான் பிறக்கிறேன் என்று கிருஷ்னர் பகவத் கீதையில் சொல்வதாக சொல்கிறார்கள். சிருஷ்டி இல்லை , படைப்பு இல்லை, பிரளயம் மட்டுமே நடக்கிறது என்பது தான் இதன் பொருள். இதில் பரிணாமம் இல்லை.



பரிணாமம் பற்றி சொல்லாமல் பிரபஞ்சம் பற்றி தமிழ் சித்தர்கள் சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று அனுக்கொள்கை, வான சாஸ்திரம் போன்ற வற்றை அறிவியல் வளர்ச்சிக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள்.


திருவள்ளுவரும் சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்க்றார்.


எங்கும் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று சொல்லவில்லை. வேதங்களில் மட்டுமே பிரம்மனிடமிருந்து மனிதன் தோற்றுவிக்கப்பட்டதாக எழுதியிருக்கிறது.

நேரம் கிடைக்கும் போது சித்தர்கள் வாக்கிலிருந்து சிலவற்றை எடுத்து எழுதுகிறேன்.

Friday, October 06, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மரண தண்டனை, கோட்சே, இஸ்லாம், ஒரிசா பாதிரியார்!

டெல்லி பாராளுன்ற குண்டு வீச்சு தீவிரவாதம் தொடர்ந்து நடந்த விசாரணையில் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய குற்றவியல் சட்டத்தின் நடைமுறை. இதை வைத்து கும்மி அடிப்பது எப்படி ?

இருக்கவே இருக்கு பழசு ! கிளறுவோம் என்று கிளம்பி தூள்பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்று இந்த தூக்குதண்டனையை வைத்து எதோ சாதனை புரிந்ததாக, நீதி நிலைநாட்டப்பட்டதாக பக்கம் பக்கமாக எழுதி தள்ளுபவர்கள், முன்பு கோட்சேவையும், ஒரிசா பாதிரியை எரித்தவர்களை உயர்வாக சொல்லியவர்கள் தான். ஏன் இந்த நிலைப்பாடு ?

தீர்ப்பு தண்டனை என்றால் அங்கு குற்றவாளியும் அவன் கேடுகெட்ட செயலும் தானே தெரியவேண்டும் ! ஆனால் அப்படி தெரிகிறதா ?

எவர் மதத்தை துற்றலாம், இதில் எந்த அளவுக்கு குளிர்காயலாம் என்பற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது வாடிக்கை ஆகிவிட்டது. இத்தகைய ஜல்லியடிப்புகள் இது போல் சூழல்களில் தொடர்ந்து நடந்தேறுகிறது. இதில் இவர்கள் சொல்வதை மாற்று மதத்தினர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா ? இவர்கள் ஞாயமாக நடந்து கொள்கிறார்களா ? என்பதைப் பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படுவதில்லை.

குற்றவாளி குற்றவாளியே ! அவன் குல்லா போட்டிருந்தானா, நாமம் போட்டிருந்தானா, சிலுவை போட்டிருந்தானா என்று ஆராய்ந்து மதங்களை தூற்றத் துணிவது இந்திய இறையாண்மையையோ, நீதித்துறையையோ தூக்கிப் பிடிக்கப் போகிறதா என்றால் அது நிச்சயம் இல்லை.

பெரும்பாலான மரண தண்டனை குறித்தப் பதிவுகள் மன அரிப்பை தீர்த்துக் கொள்வதாக இருக்கிறது.

குற்றவாளி எந்த மதம் / இனம் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு கிடைக்கும் மரண தண்டனையால் அவன் திருந்தப்போவதில்லை. அவனுக்கு அது முற்றுப் புள்ளியாக இருக்கும், அவன் விதைத்த வித்துகளால் இழி செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். கொடுமை செய்ய துணிபவர்கள் மரண தண்டனைக்கு துணிபவர்கள் அல்ல. அப்பாவிகளை கொன்றோம் என்ற சிறு உறுத்தல் கூட இல்லாமல், மாவீரர்கள் போல தூக்கு தண்டனைக்கு சிரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

அரசாங்கம் கொடுக்கும் தண்டனையும் அவனுடைய கொலையில் சேர்ந்த மற்றொமொரு கொலைதான். இதற்கு பதில் சாகும் வரை அந்தமான் சிறை போன்று எதோ சிறையில் ஆயுள் முடியும் வரை அடைத்து சாகும் வரை ஏன் இப்படி செய்தோம் என்று வருந்த வைத்தாலாவது அவனைப் பார்த்து மற்றவர்கள் திருந்தலாம்.

கொலைக்கு கொலை என்பது (மரண தண்டனை) தீவிரவாதிகளின் செயல் போன்றது.

Wednesday, October 04, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஆகாயத் தீர்த்தம்!

சிறில் அலெக்ஸசை தொடர்ந்து வெட்டிப்பயல் கொடுத்த மழை பற்றிய தலைப்புக்காக ஒரு மீள் பதிவு !



காலை நேரத்தில் நான் பார்த்த
ரோஜா இதழ்மேல் துளிகளாக
உன் எச்சில் ! அது
பனித்துளி வடிவில், நீ ரோஜாவின்
அழகை ரசித்து பதித்த
உன் இச்சை !

நெஞ்சில் ஈரமில்லா எரிச்சல் என்ற
பூமியின் வேண்டுதல் தானோ
நீ கிடைத்த வரம் ! அல்லது
பசிப்பிணி நோய்த் தீர்க்க வேண்டிய
உயிர்நிலை வாழுதலுக்கு நீர்நிலைதரும்
அட்சய பாத்திரம் நீயா ?

முகில் முகம் இருண்டு, மண்டை இடியில்
துன்ப பிரசவமாக வெளிவந்தாலும், ஒளியோடு
பிறந்த நீ ஒரு தெயவீகம் !
மானம்காத்து மார்பை மறைக்க வேண்டிய
பூமிக்கு, ஈர நூல்ச்சேலையை தொடர்ந்து
வாரி வழங்கும் கண்ணனா நீ !

மாரி உன் தூரிகையால் மகிழ்வாய்
படைக்கும் ஒவியம் வண்ணம்
இச்சைமிகு பச்சை வண்ணமோ,
உனக்கும் கோபம் வந்து, உன்
பால்முகம் பாராமுகம் காட்டிய
இடம்தான் பாலை வனமா ?

எல்லோரும் ஓர் குலம்,
எங்கும் வேண்டும் பொது நலம்,
பண்பாடு காக்க ! என்று
பேரூண்மையை உணர்த்தியே, அனைவரையும்
அன்பொழுக சிரத்தையுடன், எல்லோர் சிரங்களை
ஆசிர்வதிக்கும் ஆகாயத் தீர்தம் நீ !!!

தமிழ்மணம் கருவிபட்டை

விடுதலையா வாழ்க்கை ? (சிறுகதை) ! (தேன்கூடு அக். போட்டி)



இந்த மேனேஜர் சனியன் ஒழிஞ்சாதான் நமக்கெல்லாம் நிம்மதி, வெளிநாட்டில் போய் மகனோட செட்டில் ஆகப் போகுதாம் இந்தாங்க ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் சார்.

"அவரு நல்ல மனுசன் தானே"

"என்ன நல்ல மனுசன் ?"

"காலையில் 5 நிமிசம் லேட்டாகவந்தால் அரை மணிநேரம் ப்ளேடு போட்டு அட்வைஸ் பண்ணும்"

"லேட்டா வர்றது தப்புதானே"

"நாம என்ன வேணும்னா லேட்டா வர்ரோம், டிராபிக் ஜாம் அது இதுன்னு சமயத்துல ஆயிடுதே"

"ஹூம்"

"அப்பறம் அதோட விடுமா ? தப்பித் தவறி அவுட் கோயிங் கால் ஐந்து நிமிடம் பேசினால், அங்க உட்கார்ந்து கொண்டே முறைக்கும்"

"நம்ம ஆபிஸில் நீங்கதான் பாக்கறிங்களே, போன் எப்பவுமே எங்கேஜ் ஆக இருக்குன்னு, வெளியிலிருந்து தொடர்பு கொள்கிறவர்கள் அலுத்துக் கொள்கிறார்களே"

"அதுக்காக ஒரு ஆத்திர அவசரத்துக்கு அஞ்சு நிமிசத்துக்கு அதிகமா பேசினா தப்பா ?"

"ஹூம்"

"உங்களுக்கு எங்கே புரியப் போவது, அவரு உங்களுக்கு பாஸாக இருந்தால் தெரியும், அப்பறம் கொஞ்ச நிதானமாக சாப்பிடலாம்னு என்னைக்காவது ரசிச்சி சாப்பிடும் போதுதான், சீக்கிரமாக வாங்க, வேலை இருக்குன்னு சொல்லும் !"

"அது தப்புதான், இருந்தாலும் அலுவலகத்தில் அவசர வேலை இருக்கும் போது, செய்யணும்னு எல்லோரும் எதிர்பார்க்கிறது தானே !"

"போங்க, நீங்க அவருக்கு ஜால்ரா போட போங்க, ஆபிஸ் கண்றாவி டீயை குடிக்க வேண்டமுன்னு, வெளியில் டீ ப்ரேக் அப்போ போனால், 10 நிமிசம் டைம் கொடுத்து அனுப்பும். ஸ்கூல் டீச்சர் மாதிரி நடந்துக்கும்"

"நான் எதையும் சொல்லவில்லைப்பா ..."

"இரண்டு நாள் லீவு சேர்த்துக் கேட்டால், எதோ அதோட லீவைக் கேட்பது போல் ஆயிரம் கேள்வி கேட்டு அழுதுகிட்டே கொடுக்கும்"

"ஹூம்"

"ஒரு வழியா இன்னையோட ஒழியுது, நாளைக்கு ஸ்மார்டாக ஒருவர் வரப் போகிறாராம், நமக்கெல்லாம் குறிப்பாக எனக்கெல்லாம் இந்த சனியனிடமிருந்து விடுதலை...விட்டது தொல்லை"

மறுநாள் எல்லோரும், மீட்டிங் ரூமுக்கு அழைக்கப்பட்டார்கள்.

'குட் மார்னிங் எவரிபடி' என்று ஆரம்பித்தார் புது மேனேஜர்

"எனக்கு டிசிப்ளின் தான் முக்கியம், அலுவலக நேரத்தில் அலுவலக வேலையைத்தான் பார்கணும்"

"அலுவலகம் ஆரம்பிக்க 10 நிமிசத்துக் முன்பே எல்லோரும் உள்ளே இருக்கணும்"

"லேட்டா வருவதும் காரணம் சொல்வதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது"

"அப்படி வந்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்"

"இது மாதத்துக்கு இரண்டு தடவைக்கு மேல் நடந்தால் வார்னிங் மெமோ கொடுக்கப்படும்"

"அலுவலகத் தொலைபேசியை அலுவலக வேலைக்கு மட்டும் தான் பயன்படுத்தனும்"

"எமெர்ஜென்சி போன் எதாவது பண்ணவேண்டுமானால், அதுக்கு பர்மிசன் வாங்கிக் கொண்டுதான் பண்ணவேண்டும்"

"அலுவலகத்துக்குள் இருக்கும் போது, மதிய சாப்பாட்டு நேரமாக இருந்தாலும் அவசர வேலை இருந்தால் அப்படியே விட்டு வரவேண்டும்"

"நமக்கு பிசினஸ் தான் முக்கியம், அது நல்லா நடந்தால் தான் நமக்கு சம்பளமே கிடைக்கும்"

"டீ ப்ரேக் டைம் 10 நிமிசத்துக் மேல் யாருக்கும் கிடையாது, அலுவல நேரத்தில் வெளியில் செல்ல அனுமதி இல்லை"

"லீவு கிராண்ட் ஆகி இருந்தாலும் அவசர வேலை இருக்கும் போது கேன்சல் பண்ணப் படும்"

கேட்க கேட்க தலை சுற்றியது எனக்கு, நேற்று விடை பெற்றபோது சிரித்தபடி கண்கலங்கி விடைபெற்ற பழைய மேனஜரின் முகம் கண்முன் தெரிந்தது.

Sunday, October 01, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மகாத்மா காந்தி மறக்கக் கூடியவரா ?


மகாத்மா காந்தி மறக்கக் கூடியவரா ?

அது எப்படி ?
ஒரு நாள் அரசாங்க விடுப்பு கிடைக்கிறதே !
மறப்போமா ?

கறுப்பு பணமானாலும்
வெள்ளையாகத் தானே சிரிக்கிறார்
மறப்போமா ?

இன்னும் நூறு ஆண்டு ஆனால் என்ன ?
ஒட்டு வாங்க அவர் படத்தைத் தானே
இன்னும் பயன் படுத்துகிறோம் !
மறப்போமா ?

என்னது அந்நிய மோகமா ?
அதெல்லாம் ஒன்றுமில்லை !
உலகமயமாக்கல் என்று இன்னொரு
பெயர் வைத்திருக்கிறோமே !
காந்தியை மறப்போமா ?
தமிழ்மணம் கருவிபட்டை

அக்டோபர் 2


கள்ளத்தனாமாக இன்றும் கதவிடுக்கின்வழி,
கள்ளுக் கடைக்குள் சென்றார் காந்திஜி
ரூபாய் நோட்டில் சிரித்தபடியே !