Sunday, April 22, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

மரணமில்லா பெரியார் வாழ்வு !



பெரியார் எப்போதும் வாழ்கிறார்,
இறப்பென்பது அவருக்கு இல்லவே
இல்லை !
ஆம் !!
அதை அவ்வப்போது மெய்பிக்கிறார்கள்,
சமூக வெறுப்பாளர்கள்,
பெரியார் சிலையை சேதப்படுத்திக் காட்டி !!!

Sunday, April 08, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

நேற்றும் நாளையும் = இன்று ?




இல்லாத ஒன்றை கற்பனை செய்ய முடியாத
மனம் செக்கு மாடாக சுற்றி வருகிறது.

நிகழ்காலத்தில் எதிர்காலத்தை நினைக்கிறேனா ?
கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கிறேனா ?

உண்ணுவது, உறங்குவது என்பது போல்
அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்துப் பார்த்தால்
இன்றைய நாள் புதிதாக தெரியவில்லை.

நேற்றைய நினைவும், நாளைபற்றிய சிந்தனையும்
தவிர்த்து இன்றைக்கு என்ன செய்யப்போகிறேன் ?
என்று நினைக்கும் போது, இன்று செய்யப் போவதும்
என்றோ நினைத்ததாகவே இருக்கிறது.

இன்று என்பது,
(நேற்றைய) ஆடையை களைந்து,
(நாளைய) ஆடைய அணிவதற்குள்
இருக்கும் இடைப்பட்ட சிறிதளவு
நிர்வாண காலமாகவே இருக்கிறது.