சிறகுகளின் பசை !
எண்ணைப் பசை இருந்தும் தண்ணீர் மூழ்கி
எழ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பறவைகள் !
மரம் வளர்ப்போம் !
அழிந்த மரங்களின் காகித் கூழ்களில்
அழகான வாசகம் 'மரம் வளர்ப்போம்.....மனிதம் காப்போம்'
குக்கர் விசில் !
குயில் கறி வெந்த குக்கரும்
இனிமையாக விசலடிதது வெந்ததை அறிவிக்க !
அக்டோபர் இரண்டு !
அந்த நாளிலும் டாஸ்மாக் கதவு இடுக்கு வழியாக
கள்ளத்தனமாக நுழைந்தது காந்திப்படம்
அணையும் விளக்கு !
இறப்பின் நொடிகளை துடிப்புகளாக அறிவித்துக்
கொண்டிருந்தது ஒரு சாலை விளக்கு !
சில்லரைத் தனம் !
பிச்சைகாரனிடம் சில்லரை இல்லை என்று கைவிரிக்கக் காரணமான
நூறு ரூபாய் அர்சனைத் தட்டில் விழுந்தது !
Friday, June 18, 2010
Wednesday, March 31, 2010
பெரியார் தாசன் ஆனதென்ன அப்துல்லா !
நாத்திகன்
ஆத்திகன் ஆனான்
முதலில்
புத்தனாக, பின்
இஸ்லாமியனாக, இந்(து)த
ஆத்திகர்கள் மகிழ்ந்ததாகத்
தெரியவில்லை.
பிறகு ஏன் நாத்திகன் மீதான வெறுப்பு ?
இங்கே
கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம்
வெறும் மதமும், மதம் சார்ந்த
நம்பிக்கைகள் மட்டுமே...
என்பதற்கு மற்றொரு சான்று
பெரியார் தாசன் !
Subscribe to:
Posts (Atom)