Friday, June 18, 2010

தமிழ்மணம் கருவிபட்டை

ஹைகூ......வுங்க !

சிறகுகளின் பசை !

எண்ணைப் பசை இருந்தும் தண்ணீர் மூழ்கி
எழ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பறவைகள் !



மரம் வளர்ப்போம் !

அழிந்த மரங்களின் காகித் கூழ்களில்
அழகான வாசகம் 'மரம் வளர்ப்போம்.....மனிதம் காப்போம்'

குக்கர் விசில் !

குயில் கறி வெந்த குக்கரும்
இனிமையாக விசலடிதது வெந்ததை அறிவிக்க !

அக்டோபர் இரண்டு !

அந்த நாளிலும் டாஸ்மாக் கதவு இடுக்கு வழியாக
கள்ளத்தனமாக நுழைந்தது காந்திப்படம்

அணையும் விளக்கு !

இறப்பின் நொடிகளை துடிப்புகளாக அறிவித்துக்
கொண்டிருந்தது ஒரு சாலை விளக்கு !

சில்லரைத் தனம் !

பிச்சைகாரனிடம் சில்லரை இல்லை என்று கைவிரிக்கக் காரணமான
நூறு ரூபாய் அர்சனைத் தட்டில் விழுந்தது !

Wednesday, March 31, 2010

தமிழ்மணம் கருவிபட்டை

பெரியார் தாசன் ஆனதென்ன அப்துல்லா !


நாத்திகன்

ஆத்திகன் ஆனான்

முதலில்

புத்தனாக, பின்

இஸ்லாமியனாக, இந்(து)த

ஆத்திகர்கள் மகிழ்ந்ததாகத்

தெரியவில்லை.

பிறகு ஏன் நாத்திகன் மீதான வெறுப்பு ?

இங்கே

கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம்

வெறும் மதமும், மதம் சார்ந்த

நம்பிக்கைகள் மட்டுமே...

என்பதற்கு மற்றொரு சான்று

பெரியார் தாசன் !