Wednesday, August 16, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

பூமியே எனது சொர்க்கம் !



நான் வாழும் என் உலகில்
எனக்குமுன் பிறந்து வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள் அனைவரும்
என் அன்பை நாடும்,
என் அண்ணன்கள், அக்காக்கள் !
எனக்குப்பின் பிறந்து தவழ்ந்து
கொண்டிருப்பவர்கள் அனைவரும்
நான் அன்பு போற்றும்,
என் தம்பிகள், தங்கைகள் !
இவையே நான் பார்க்கும் உலகம் !

நான் வாழும் காலத்தில் வாழும் இவர்களை
கொஞ்சி மகிழாமல்,
வஞ்சித்தால் எனக்கு எங்கே இருக்கிறது
சொர்க்கம் ?

இறைவன் கண்ணுக்குத் தெரியவில்லை !
என்னையும் பெற்ற, இறைவன் பெற்ற

பிள்ளைகளான என் உடன்பிறப்புகள்
கண்ணுக்குத் தெரிகிறார்கள் !

இவர்களை நிரந்தரமாக
நான் பிரியும்பொது,
ஒருவேளை நான் தேடலாம்
இன்னொரு சொர்க்கம் !

அதுவரை,
நான் வாழும் பூமியே சொர்க்கம் !
பார்க்கும் மனிதர்களே
என் அன்புச் சொந்தங்கள் !

10 : கருத்துக்கள்:

said...

கவிதை நன்றாக உள்ளது.
பாராட்டுக்கள்.

(கிழிருந்து மூன்றாவது பாராவில் எனக்கு உடன்பாடு இல்லை.)

said...

///
பார்க்கும் மனிதர்களே
என் அன்புச் சொந்தங்கள் !
///

இந்தச் சிந்தனை எல்லோருக்கும் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்

said...

என்னையும் பெற்ற,
இறைவன் பெற்ற
பிள்ளைகளான என் உடன்பிறப்புகள்
கண்ணுக்குத் தெரிகிறார்கள் !

:))

said...

//(கிழிருந்து மூன்றாவது பாராவில் எனக்கு உடன்பாடு இல்லை.)//
எனக்கு உடன் பாடு உண்டு நரகத்தை சொர்க்கமாக மாற்ற நம்மால் தான் முடியும்.

அது சரி சொர்க்கத்தைக் கண்டவர்கள் யார் நரகத்தைக் கண்டவர்வர்கள் யார்

said...

கவிதை நல்லாயிருக்கு..

said...

//மின்னுது மின்னல் said...
கவிதை நன்றாக உள்ளது.
பாராட்டுக்கள்.

(கிழிருந்து மூன்றாவது பாராவில் எனக்கு உடன்பாடு இல்லை.)
//
மின்னுது மின்னல் ...! ஒன்றே குலமென்று பாடுவோம் ... ஒருவனே தேவன் என்று போற்றுவோம் !

said...

//குமரன் எண்ணம் said...

இந்தச் சிந்தனை எல்லோருக்கும் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் //

குமரன் ... !
அன்னைத் தெரசா, மகாத்மா, விவேகா நந்தர் அன்றும், இன்றும் ஒரு கலாம் போன்றவர்கள் இருக்கிறார்கள் நம்மை தொடர்ந்து சிந்திக்கவைக்க !

said...

//மகேந்திரன்.பெ said...
என்னையும் பெற்ற,
இறைவன் பெற்ற
பிள்ளைகளான என் உடன்பிறப்புகள்
கண்ணுக்குத் தெரிகிறார்கள் !

:))
//
வாங்க மகி ... !
நீங்க ரொம்ப நல்லவரு :))

said...

// ENNAR said...
//(கிழிருந்து மூன்றாவது பாராவில் எனக்கு உடன்பாடு இல்லை.)//
எனக்கு உடன் பாடு உண்டு நரகத்தை சொர்க்கமாக மாற்ற நம்மால் தான் முடியும்.

அது சரி சொர்க்கத்தைக் கண்டவர்கள் யார் நரகத்தைக் கண்டவர்வர்கள் யார்
//

சொர்க்கம் நம்ப மனசு தான்... நல்லதை உணர்ந்தால் எங்கும் சொர்க்கம் தான்.

- ஒரு சாமியார் ரேஞ்சிக்கு இப்படித்தான் சொல்ல முடியும் ... ஏன்னா இந்த கவிதை அப்படி :))

said...

//Sivabalan said...
கவிதை நல்லாயிருக்கு..
//
சிபா ... நன்றி !