
சரவணன் : சூப்பர் சார்... ! எப்படி சொல்றதுன்னு தெரியலை, இருந்தாலும் உங்களை விட்டால் யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை
சூப்பர் : என்ன சொல்ல வர்றீங்க, வழக்கமா எனக்கு தான் சொல்லவே வராது
சரவணன் : இதுவரைக்குக் 40 கோடி அள்ளிவிட்டாச்சி
சூப்பர் : தெரிஞ்சது தானே, 40க்கு 100 கிடைக்க போவதே
சரவணன் : கிடைக்காது போலிருக்கு
சூப்பர் : என்ன சார் சொல்றிங்க
சரவணன் : படத்தோட சீனு எல்லாம் இன்டர் நெட்டுல வந்துடுச்சின்னு சொல்லி...
சூப்பர் : அதுவும் தெரிஞ்ச விசயம் தானே !
சரவணன் : அதே தான், அதச் சொல்லி டைரக்டர் என்ன சொல்றாரு தெரியுமா?
சூப்பர் : சார் ... நீங்க புரோடியூசர், அவரு டைரக்டர் எனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்
சரவணன் : இப்ப என்ன ஆச்சு தெரியுமா, சுவிட்சர்லாந்தில எடுத்த சீன் எல்லாம்
எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சின்னு, டைரக்டர் அதிர்ச்சி ஆயிட்டாராம்
சூப்பர் : நான் கூட கேள்விப் பட்டேன் மிஸ்டர் சரவணன், இதெல்லாம் இன்டெர்நெட் இருக்கிறதால ஒடனே பரவிடுது
சரவணன் : ஆமாம், நானும் அதைத்தான் சொன்னேன். ஒன்னும், குடிமுழுகல இருக்கிறதையே காட்டலாம் என்றேன் டைரக்டர் கோபப்படுகிறார்
சூப்பர் : என்னவாம்
சரவணன் : எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, நான் எடுக்கிற படம் என்றால் அதை தனிக்கை குழுகூட ரிலிஸ் பண்ணறத்துக்கு முன்னால பார்க்கக் கூடாதுங்கிறார்.
சூப்பர் : ம்.. அப்பறம் தனிக்கை சர்டிபிகேட் இல்லாமல் எப்டி ரிலிஸ் செய்கிறதாம் ?
சரவணன் : அவரு இங்க இருக்கிற தணிக்கை குழுக்கிட்ட போறது இல்ல, நேர மும்பை இல்லாட்டி டெல்லி போய் வாங்கிக்கலாம்னு சொல்றார். போன படத்திலும் அப்படித்தான் செய்தாரம்.
சூப்பர் : சரி எதோ செய்யுங்க இதான் பிரச்சனையா ?
சரவணன் : சூப்பர் சார் அது பிரச்சனை இல்லை
சூப்பர் : வேறு எதுதான் பிரச்சனை. நம்ம கலிஞர் ஐயாதானே இப்ப முதல்வராக இருக்கிறார்
சரவணன் : இது அரசியல் விவகாரம் இல்லை, விவகாரம் டைரக்டரால
சூப்பர் : கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
சரவணன் : தெளிவா சொல்றத்துகுள்ள எதாவது யோசனை செஞ்சிக்கிட்டே இமயமலைப் பக்கம் போய்டுவிங்கலேன்னு...
சூப்பர் : சார்.. அதெல்லாம் ஒன்னுமில்லை கண்டிப்பா படம் முடியறவரைக்கு வேறு எங்கும் போக மாட்டேன்.. நா ஒருதரம் சொன்னா..
சரவணன் : போதும் நம்பிக்கை வந்துடுச்சி. நம்ப டைரக்டர் ஒங்கள வச்சி எடுத்தப்படக் காட்சிகள் வெளியில வந்ததால, வேறு காட்சிகள் வைத்து யாருமே செல்லாத அமேசன் காட்டுகுள்ள போய் எடுக்கப் போறாராம்.
சூப்பர் : என்ன சரவணன் சார் பயமுறுத்துறிங்க
சரவணன் : நானே பயந்து தான் போயிருக்கிறேன். இது வரைக்கும் செலவு செஞ்ச பணமே
அனகோண்டா மாதிரி கழுத்தைப் பிடிக்குது
சூப்பர் : அது சரி அமேசன் சூட்டிங்க் போன அனகோண்டாவே கழுததை பிடிச்சுடுமே
சரவணன் : இதைத்தான் நான் சொன்னேன்
சூப்பர் : அவரு அதுக்கு என்ன சொன்னார் ?
சரவணன் : இங்கேயே செட்டு போட்டு எடுத்திடலாம் என்கிறார்
சூப்பர் : நல்ல யோசனை தானே, சோழவரம் ஏரியோ, பிச்சாவரம் ஏரியோ அதுல ஒன்னுல செட்டுப் போட்டு எடுத்திடலாமே சரவணன் சார்
சரவணன் : அதுலயும் சிக்கல், சுற்றுச் சூழல் நிர்வாகத்தினர் அனுமதி கொடுக்க மாட்டாங்களாம் !
சூப்பர் : அதுவும் சரிதான், இதைத் தெரிஞ்சுமா டைரக்டர் பிடிவாதமாக இருக்கிறார்
சரவணன் : அவரு சொல்றார் 'இந்த ஒரு சீனுதான் படத்தில் முக்கியம், அதை வெச்சுதான் 200 நாள் ஓட்டலாம் என்று இருக்கிறேன் படத்தில் அமேசான் காடுகள் கண்டிப்பாக வரனும், கதைப்படி வில்லன் சுமன் படம் எடுக்கிறத்துக்காக ஹீரோயினியை அமேசான் காட்டுகுள்ள கடத்திட்டு போய்விடுவாராம்... அதை தெரிஞ்சிக்கிட்ட ஹீரோ, அனகோண்டாவுக்கு மத்தியில் வில்லனை அனகோண்டாவை வச்சே பின்னி எடுக்கிறார்.. அந்த சமயத்தில் ஒரு அனகோண்டா ஹீரோயினையை லபக்க முயற்ச்சிப் பண்ணுது... ஹீரோ ஹீரோயினை அனகோண்டா கிட்டேர்ந்து காப்பாத்துறார்.
அதனால சோழவரம் ஏரிகிடைக்க வில்லை என்றால், சோழாவரம் ரேஸ் மைதானம் இப்ப சும்மாதான் இருக்கு, அதை 60 நாளைக்கு லீசுக்கு எடுத்து, அமேசான் காடு மாதிரி செட்டு போட்டிடலாம், செயற்கையா வேண்டுமானால் பத்தாயிரம் அனகோண்டா செஞ்சிடலாம் ஒரு முப்பது கோடிதான் செலவு ஆகும்' என்று கூலாக சொல்கிறார்.
சூப்பர் : என்னது மூன்று நிமிச சீனுக்கு 30 கோடியா ? டைரக்டர் அப்படியா சொன்னார் ?
சரவணன் : ஆமாம் ! இதுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் படம் 2010 தீபவளிக்குதான் ரிலிஸ் ஆகும் என்னை கோவிச்சிக்காதிங்க என்று கறாராக சொல்கிறார். இதை உங்கள விட்டா நான் யாருகிட்ட சொல்றது.
சூப்பர் : எனக்கு கொழப்பமாக இருக்கு சரவணன் சார், மருமகனை தேற்றிவிட அடுத்த படத்தை அவரைவச்சி
டைரக்ட் பண்ணச் சொல்லலாம் என்று இருந்தேன் ... இப்ப யோசிக்கனும் போல இருக்கு.
சரவணன் : சூப்பர் சார், எதுக்கும் நம்ம படம் முடியட்டம் அதுக்குள்ள அவசரப்பட்டு அவருக்கு வாக்கு கொடுத்திடாதிங்க. உங்களுக்கு ஒன்னு தெரியுமா ?
சூப்பர் : சொல்லுங்க சரவணன் சார்
சரவணன் : ஏற்கனவே போட்ட பட்ஜட்டைவிட இரண்டு மடங்கு இதுவரைக்கும் எகிறிடிச்சு, கண்ணாடி முன்னால போயி என் முகத்தைப் பார்த்தால் ஏ.எம் ரத்தினமும். கே.டி.குஞ்சுமோனும் என்னைப் பார்த்து பழிச்சிக்காட்டி சிரிக்கிறமாதிரி இருக்கு 1
சூப்பர் : என்ன கொடுமை சரவணன் சார் !!! இது
பின்குறிப்பு : இது ஒரு லக்க லக்கவுக்கு .... சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி கல கலப்புக்காக எழுதிய கற்பணை உரையாடல்.