Wednesday, October 25, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

ஆணவமற்றவர் ஜெ - தேமுதிகவினர் பாராட்டு !


ஆணவமற்றவர் (ஆணவம் கொண்டவர் அல்ல) என அம்மாவை பாராட்டியதுடன் நில்லாமல், அம்மாவுக்கு பிடித்த பச்சை நிறத்தில் போஸ்டர் அடித்து இருக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள் !

இது தெரியாமல் ஜெ - கேப்டன் லடாய் என்று திமுகாவினரும் தினகரனும் வதந்தி கிளப்பிவிடுகிறார்கள்!

படம் : நன்றி தினகரன்

25 : கருத்துக்கள்:

said...

GK,

இதை யார் எடுத்து சொல்லாப் போறாங்களோ.. Ha Ha Ha...

said...

//Sivabalan said...
GK,

இதை யார் எடுத்து சொல்லாப் போறாங்களோ.. Ha Ha Ha...
//

சிபா...!

*மப்பில்* யாரோ தவறுதலாக எழுதிவிட்டார்கள் போல் !
:)

said...

இப்பவே மயக்கம் ஆரம்பித்துவிட்டது போல!!

said...

//வடுவூர் குமார் said...
இப்பவே மயக்கம் ஆரம்பித்துவிட்டது போல!!
//

வடுவூராரே !
ஜெ - சொன்னது சரிதான் என்று தொண்டர்கள் மெய்பிக்கிறார்கள் போல !
:)

said...

போஸ்டர் கலாச்சரம் ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும்!

said...

//SK said... "போஸ்டர் கலாச்சரம் ஒழிந்தால்தான் தமிழகம் உருப்படும்!"//

எஸ்கே ஐயா !
தேமுதிக தொண்டர்கள் பற்றி 4 வார்த்தை நல்லதாக சொல்லுவிங்கன்னு பார்த்தால் ஒட்டு மொத்தமாக சொல்வது காமடியாகவா இருக்கு ?
:)

said...

ஆணவமற்றவர் ஜெ - தேமுதிகவினர் பாராட்டு //

ஆமாம், புரட்சித் தலைவிக்கு முகஸ்துதி பிடிக்காது,யாரும் தன் காலில் விழுவது அறவே பிடிக்காது.
பண்பு,அடக்கம்,மக்கள் நலன் மேல் அக்கறை, போன்றவற்றில் சில சமயம் கருணாநிதிக்கு முதலிடம்;சில சமயம் காவிரி தந்த கலைத் தாய் முதலிடத்தில்.பார்ப்போம், நம்ம மருத்துவர் அய்யாவும்,கேப்டனும் இவங்க ரேஞ்சுக்கு வருவாங்களான்னு.மொத்தத்தில், தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பாலா

said...

உங்களோடு ஒரே நகைச்சுவைதான் போங்க-

ஆட்டோகிராஃப் படத்துல வர ஒரு வசனம்தான் இது.

said...

:-))))

said...

//bala said...
ஆணவமற்றவர் ஜெ - தேமுதிகவினர் பாராட்டு //

ஆமாம், புரட்சித் தலைவிக்கு முகஸ்துதி பிடிக்காது,யாரும் தன் காலில் விழுவது அறவே பிடிக்காது.
பண்பு,அடக்கம்,மக்கள் நலன் மேல் அக்கறை, போன்றவற்றில் சில சமயம் கருணாநிதிக்கு முதலிடம்;சில சமயம் காவிரி தந்த கலைத் தாய் முதலிடத்தில்.பார்ப்போம், நம்ம மருத்துவர் அய்யாவும்,கேப்டனும் இவங்க ரேஞ்சுக்கு வருவாங்களான்னு.மொத்தத்தில், தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பாலா
//

பாலா !
சந்தடி சாக்கில் எல்லோரையும் ஒரே போடாக போட்டுவிட்டீர்களே !
WELL SAID !
:)

said...

//ILA(a)இளா said...
உங்களோடு ஒரே நகைச்சுவைதான் போங்க-

ஆட்டோகிராஃப் படத்துல வர ஒரு வசனம்தான் இது.
//
இளா !
சந்தோசத்தில் பெரிய சந்தோசமே அடுத்தவர்களை மகிழ்விப்பதுதான் !

நடிகர் திரு பாக்கியராஜ் அடிக்கடி சொல்லும் வசனம் இது !
:)

said...

//குமரன் எண்ணம் said...
:-))))

10:07 PM
//

சின்னக் குமரனின் புன்னைகைக்கு நான் காரணமா ? போஸ்டர் காரணமா ?
:)

said...

போஸ்ட்டர் அடிச்சவனுக்கு பாதி காசுதான் குடுத்துருப்பாங்கன்னு நினைக்கேன்..

அல்லது அவர் ஜெ அனுதாபியாருப்பார்..

யார் கண்டா?

said...

//tbr.joseph said...
போஸ்ட்டர் அடிச்சவனுக்கு பாதி காசுதான் குடுத்துருப்பாங்கன்னு நினைக்கேன்..

அல்லது அவர் ஜெ அனுதாபியாருப்பார்..

யார் கண்டா?
//
ஐயா !

மிகச் சரியா சொல்லியிருக்கீங்க !
அரசியல் வியாதிங்க போஸ்டர் அடிச்சா பாதி காசுதான் கொடுப்பாங்க !

அல்லது அடித்தவர் அம்மாவின் அபிமானியாகவும் இருக்கலாம் !

சரியாக சொன்ன ஜோசப் ஐயாவுக்கு !
திமுக சார்பில் ஒரு 'ஓ'
:)

said...

இதற்கு பெயர் தான்

வஞ்சப் புகழ்ச்சியோ. . . .

said...

//வெங்கட்ராமன் said...
இதற்கு பெயர் தான்

வஞ்சப் புகழ்ச்சியோ. . . .
//

வெங்கட்ராமன் சார்...!
இது வாஞ்சையால் வந்த புகழ்ச்சியாக கூட இருக்கலாம் !
:)

said...

//Sadai Appa said...
Idhellaam arasiyalil sadharanamappa.
//

வாங்க சடை !
சாதரணமாக சொல்லிடிங்களே ! இதெல்லாம் அரசியலில் மிகச் சாதாரணம் !
:)

said...

போஸ்டர் கலாச்சாரம் ஒழிந்தால் தேவலைன்னு எஸ்கே ஐயா சரியா சொல்லியிருக்கிறார். ஆனால்
இன்னொரு சரியான போஸ்டர் பின்னாலேயே வருவதற்கு வழி பண்ணிட்டீங்களே ஜிகே.

said...

//சுல்தான் said...
போஸ்டர் கலாச்சாரம் ஒழிந்தால் தேவலைன்னு எஸ்கே ஐயா சரியா சொல்லியிருக்கிறார்.
//

சுல்தான் ஐயா !
போஸ்டர் பிஸினஸ் வைத்து தான் சிவாகாசியில் பிரிண்டிங் பிரஸ் காராங்க வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் ! கட்வுட் இல்லை என்றால் பல குடும்பங்கள் பட்டினி கிடக்கம் ... ! என்ற நல்ல எண்ணத்தில் தான் அரசியல் வாதிகள் இதைச் செய்கிறார்களோ ! :)

இன்னுமொரு போஸ்டரா ?
நல்லதுதான் அதிலாவது சரியாக இருக்கிறதான் என்று பார்ப்போம் !:)

said...

//Sadai Appa said...
Ammavin erahasiyangalai naaduthane thangaadhu, naangal tahnguoom, konjam pottal nalla irukkum.
//

சடை அப்பா !
தினமலர் துணுக்கு மூட்டை ரசிகரா நீங்கள் ?
:)

அம்மாவுக்கு என்று என்ன ரகசியம் இருக்க முடியும் அவுங்க பொதுவாழ்க்கையில் நுழைந்து மும்முறை முதல்வராகவும் இருந்தாச்சு !
:)

said...

//மும்முறை முதல்வராகவும் இருந்தாச்சு !//

மும்முறையில் ஒருமுறை சட்டப்படி செல்லாதது :-)

said...

// முத்துகுமரன் said...
//மும்முறை முதல்வராகவும் இருந்தாச்சு !//

மும்முறையில் ஒருமுறை சட்டப்படி செல்லாதது :-)
//

முத்து குமரன்...!

கவலையை விடுங்க அடுத்தமுறை முதல்வராக ஆகும் போது கணக்கு சரியாகிவிடும் !
:)

said...

// முத்துகுமரன் said...
//மும்முறை முதல்வராகவும் இருந்தாச்சு !//

மும்முறையில் ஒருமுறை சட்டப்படி செல்லாதது :-)
//

முத்து குமரன்...!

கவலையை விடுங்க அடுத்தமுறை முதல்வராக ஆகும் போது கணக்கு சரியாகிவிடும் !
:)

said...

//கவலையை விடுங்க அடுத்தமுறை முதல்வராக ஆகும் போது கணக்கு சரியாகிவிடும் !
:)
//
NTPK :-)

said...

ஒருவேளை தினகரனில் செய்தி வரவேண்டும் என்று அப்படி செய்திருப்பாங்களோ! ஏன்னா என்ன செய்தால் தினகரன் எட்டிப்பார்க்கும்னு எல்லொருக்கும் தெரிந்ததுதானே!
:)))