Saturday, October 14, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நகராட்சித் தேர்தல் - நரகாசூரன் அவதாரம் !


பச்சை அம்மா நரகாசூரன் வதம் செய்வேன் என்றதை
மஞ்சள் துண்டு அய்யா ஏற்றுக்
கொண்டு அவதாரம் எடுத்து இருக்கிறார்
நகராட்சித் தேர்தலில் நரகாசூரனாக !

அன்றும் இன்றும் காவல் பூனைகளின்
கைதடிகளில் நசுங்குகிறது, நடுங்குகிறது
ஜனநாயகம் !

காராத்தே கைகளின் வழி அன்றும் இன்றும்
அதே தேர்தல் காட்சி !

கட்சிகளின் பெயரில் வெட்டிக் கொண்டாலும்
சிந்துவது தமிழன் இரத்தம் தானே !
பலிவாங்குவதற்கு என்றே தோற்றவருக்கு
அடுத்த தேர்தலில் வாய்பை
நாம் கொடுக்காமல் போய்விடுமோ என்ன ?

கருப்பாய் தோல் இருப்பதால் தமிழனுக்கு
சிறுமை இல்லை என்றும் !

தோல் தடித்துக் கொண்டே போவதல்,
சுரணையற்று போவதால் இழுக்கும்,
இழப்பும் உண்டு !

சிந்தீப்பீர் தமிழர்களே !
தேர்தல் காலம் தவிர்த்தும் !

6 : கருத்துக்கள்:

said...

கண்டிக்க தக்கது...கலைஞர் அரசு நல்ல முறையில் நடத்த தவறிவிட்டது

said...

ஜெயலலிதா மேல் நம்பிக்கை இருந்ததேயில்லை. கருணாநிதி மேல் நம்பிக்கை போயே போச்சு. இப்ப இல்ல. சட்டமன்றத் தேர்தல்லையே. தேர்தல் முடிவுகளை விமர்சிக்கும் பொழுதே நான் சொன்னது அதுதான். அடப்போங்கய்யா.......

said...

//கட்சிகளின் பெயரில் வெட்டிக் கொண்டாலும்
சிந்துவது தமிழன் இரத்தம் தானே !
பலிவாங்குவதற்கு என்றே தோற்றவருக்கு
அடுத்த தேர்தலில் வாய்பை
நாம் கொடுக்காமல் போய்விடுமோ என்ன ?//


பிச்சு உதறிட்டீங்க கோவியாரே!

அருமையான வரிகள்!

நீங்காத் தலைக்குனிவை ஏற்படுத்திய இவர்களை மன்னிக்கக்கூட மனம் வர மாட்டேன் என்கிறது!

மஞ்சள் துண்டையும், கராத்தேயையும் ஒருங்கே அரங்கேற்றி, இவர்கள் தோலை நன்கு உரித்துக் காட்டி இருக்கிறீர்கள்.

said...

//Sivabalan said...
கண்டிக்க தக்கது...கலைஞர் அரசு நல்ல முறையில் நடத்த தவறிவிட்டது
//

சிபா...!
குட்டும் போது குட்டவேண்டும்,
என்று என்னுடன் சேர்ந்து கருத்துக்களை பகிர்வதற்கு நன்றி !

said...

//G.Ragavan said...
ஜெயலலிதா மேல் நம்பிக்கை இருந்ததேயில்லை. கருணாநிதி மேல் நம்பிக்கை போயே போச்சு. இப்ப இல்ல. சட்டமன்றத் தேர்தல்லையே. தேர்தல் முடிவுகளை விமர்சிக்கும் பொழுதே நான் சொன்னது அதுதான். அடப்போங்கய்யா.......
//

ஜிரா...!

நாம் நேரிடியாக பாதிக்கப் படாதவரை இப்படித்தான் சொல்லுவோம், என்று சிலர் எனது முந்தைய பதிவுகளில் முன்பு அறிவுரை(?) கூறியுள்ளனர். ! உங்கள் கருத்துக்கு இதுபோல் விமர்சனங்களும் வரும் !
உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடே !

said...

//SK said... மஞ்சள் துண்டையும், கராத்தேயையும் ஒருங்கே அரங்கேற்றி, இவர்கள் தோலை நன்கு உரித்துக் காட்டி இருக்கிறீர்கள். //

எஸ்கே ஐயா ...!
அல்லது அகற்றுவதில் அரண்டது இல்லை !
:)