Wednesday, October 25, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

நாமெல்லாம் ஜந்துக்கள் !


இருப்பது இறப்பதற்கே என்று
நன்றாக தெரியும் !
சாம்பலாகும் முன் சாதி பற்று
இல்லாமல் இருப்போமா ?

எல்லோருடைய உதிரமும் சிவப்பு
என்பது நன்றாக தெரியும் !
தோலின் நிறம் பார்த்து
தூற்றாமல் இருப்போமா ?

இருபாலர் மூத்திரமும் உவர்ப்பே
என்று நன்றாக தெரியும் !
ஆண்(வர்க) குறி ஆணவம்
இல்லாமல் இருப்போமா ?

வியர்வையின் வீச்சமும், கழிவின்
துர்நாற்றமும் எல்லோருக்கும் உண்டு
பாமரரை பண்பாடற்றவர் என்று
பழிக்காமல் இருப்போமா ?

இறைவன் என்பவன் ஒருவனே
என்று நன்றாக தெரிந்தும்,
மாற்று மத இறைவனை
எள்ளாமல் இருப்போமா ?


இதையும் படிக்கலாம் -
ஆழியூரன்

9 : கருத்துக்கள்:

said...

ஆஹா!. இது நல்லாருக்கே!
(திருட்டுப்பயலே படத்தில் வரும் பாட்டில் ஒரு பெண்குரல் - அந்த ஸ்டைலில் படிக்கணும்.)

said...

கவிதை நல்ல கருத்துடன்
நன்றாக இருக்கிறது

said...

GK,

நல்ல சிந்தனை.

நல்ல கவிதை.

மாற்றங்களை ஏற்படுத்தினால் சரி.

said...

//வியர்வையின் வீச்சமும், கழிவின்
துர்நாற்றமும் எல்லோருக்கும் உண்டு
பாமரரை பண்பாடற்றவர் என்று
பழிக்காமல் இருப்போமா?//

நாலு நாளா குழிக்காம ஒன் மேன் ஷோ போட்டு ஷோ காட்டுறவனை விட வியர்வை நாத்தத்தோட இருக்குற தள்ளுவண்டி வியாபாரி பரிசுத்தமானவர்.

said...

// சுல்தான் said...
ஆஹா!. இது நல்லாருக்கே!
(திருட்டுப்பயலே படத்தில் வரும் பாட்டில் ஒரு பெண்குரல் - அந்த ஸ்டைலில் படிக்கணும்.)
//

சுல்தான் ஐயா !
பொய் சொல்லப் போறேன் பாட்டுதானே !

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

said...

//சுதேசன் said...
கவிதை நல்ல கருத்துடன்
நன்றாக இருக்கிறது
//

சுதேசன் !
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி !

said...

//Sivabalan said...
GK,
நல்ல சிந்தனை.
நல்ல கவிதை.
மாற்றங்களை ஏற்படுத்தினால் சரி. //

சிபா...!
மனதில் பட்டதை சொல்வோம் !
அதுக்கு மேல் எல்லாம் நினைப்பது இல்லை !

:)

said...

//ஆழியூரான் said...
நாலு நாளா குழிக்காம ஒன் மேன் ஷோ போட்டு ஷோ காட்டுறவனை விட வியர்வை நாத்தத்தோட இருக்குற தள்ளுவண்டி வியாபாரி பரிசுத்தமானவர். //

ஆழியார் அவர்களே !

சரியாக சொன்னிங்க !

ஷோ காட்டுறவங்களே அவுங்க வியர்வை நாத்தத்தை தாங்க முடியாமல் தானே ஷோ காட்டுறாங்க !

வருகைக்கு நன்றி !

said...

ஆதங்கம் புரிகிறது.
நெத்தியடி!!