எஃகு கோட்டை போல் உறுதியான கூட்டணி என்று திமுகவால் சொல்லப்படும் திமுக கூட்டணி, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு உலுத்துப் போன கூட்டனியாகிவிடும் போல் இருக்கிறது.
முதல்வர் கருணாநிதி விஜயகாந்தின் வளர்சியை பாராட்டிப் பேச, அதிமுக தலைமையில் சீறிய அறிக்கை தேமுதிகவின் தலைமையை உசிப்பேற்றி அவதூறுகள் இருப்பக்கமும் அரங்கேறி அடங்கியிருக்கிறது. தேமுதிகவை போட்டியாக நினைக்கும் அளவுக்கு அது ஒரு கட்சியே இல்லை என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை பேசிய பாமக. விஜயகாந்தின் விருதாசால வெற்றிக்கு பிறகு எதிரி கட்சியாக நினைக்க ஆரம்பித்து விட்டது எல்லோரும் அறிந்ததே.
கலைஞர் கூட்டணியுடன் உள்ளாட்சி தேர்தலை சந்தித்த பாமக, கலைஞரின் விஜயகாந்த் குறித்த பாராட்டு பேட்டியை சகித்துக் கொள்ள முடியவில்லை. நகராட்சி தேர்தலில் சில இடங்களில் தோற்றது பாமகவை முதலில் கவலை கொள்ள வைக்காவிட்டாலும், விஜயகாந்தை ஒரு பொருட்டாகவே நினைக்காத ஜெ-வே சீறி இருக்கும் போது விஜயகாந்தின் வளர்ச்சியை பாமகவால் ஊகிக்க முடிந்தது. a அது மட்டுமல்ல ஊடகங்கள் யாவும் விஜயகாந்தை நோக்கி திரும்ப, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக என்னும் செல்வாக்கு வரிசையில் அடுத்து இருக்கும் தங்கள் கட்சிக்கு சரிவாகிவிடும் என்ற கருதிய பாமக தலைமை திமுகவிற்கு எதிராக திடீர் அறிக்கை தாக்குதல் செய்து ஊடகங்களையும் திசைத் திருப்பி இருக்கிறது.
இந்த திடீர் அறிக்கை தாக்குதல் திமுகவிற்கு சங்கடமாக இருந்தாலும், விஜயகாந்தை பாராட்டி பேசியதற்காக பாமக கோபம் கொண்டுள்ளாத நினைத்து இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்ள விரும்புவதாக தெரிகிறது.
பாமக அவ்வளவு வேகமாக திமுக கூட்டணியில் இருந்து விலக முடியாது, அப்படி விலகினால் திமுக தலைமை காங்கிரசுக்கு நெருக்கடி கொடுத்து சுகாதாரத்துறை மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியை கழட்டிவிடச் சொல்லும். ஐந்தாண்டுக்குள் பதிவையை துறக்க பாமக தலைமைக்கு விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை. பின்பு எதற்கு திமுகவிற்கு எதிரான அறிக்கை ?
1. தேமுதிகவில் மையம் கொண்டிருக்கும் ஊடகங்களை திசைத் திருப்ப, 2.திமுக கூட்டணியில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, 3. எதற்கும் எதிர்காலத்திற்காக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் மறைமுகமாக அதிமுக தலைமைக்கு சிக்னல்.
பாமக ஒரே ஒரு திடீர் அறிக்கையில் அடிக்க முயன்றது மூன்று மாங்கனிகள்.