Monday, September 25, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

மறைந்திருந்தே ...!



மறைந்திருந்தே ...!

பூவே...! பூச்சூடி சென்றயோ ...?
மறைந்துவிட்டாலும் என்றும் விலகாத
ஆச்சரியம் நீ ! இனி
மறைந்திருந்து தான் நீயே
எங்களைப் பார்க்கவேண்டும் என்பது
படைத்தவன் மட்டுமே
அறிவான் அந்த மர்மம் ...!
நலம் தானா ...? கேட்க இனி
நாங்கள் வரவேண்டும் உன்னிடத்தில் !
நீ செல்லும் முன்,
மன்னவன் சென்றானடி தோழி !
உன் நாட்டியம் அரங்கேற்றம்
தேவலோகத்தில் மட்டும் தானா ?
சுந்தரி நீ சென்றதால்,
ரம்பா, ஊர்வசி, மேனகை
மூன்று பேருக்கும் வேலை
இருக்குமோ இனி இந்திரசபையில் !
இன்னொருத்தி நிகராகுமோ !
உனக்கு இன்னொருத்தி நிகராகுமோ !
நடராஜனின் பாதத்தில் இனி
நிதம் ஒலிக்கும் உன் பரதம் !

பி.கு : நாட்டிய பேரொளி பத்மினி அம்மாவுக்கு இதய அஞ்சலி

5 : கருத்துக்கள்:

said...

GK,

கவிதாஞ்சலி தெரிவித்துள்ளீர்கள்.. நானும் இதில் கலந்துகொள்கிறேன்.

அவருக்கு எனது இதய அஞ்சலி.

said...

//
Sivabalan said...
GK,

கவிதாஞ்சலி தெரிவித்துள்ளீர்கள்.. நானும் இதில் கலந்துகொள்கிறேன்.

//
சிபா...!

நன்றி.

said...

அஞ்சலி அஞ்சலி.

நானும் இதில் கலந்துகொள்கிறேன்.

said...

//துளசி கோபால் said...
அஞ்சலி அஞ்சலி.

நானும் இதில் கலந்துகொள்கிறேன்.
//

துளசியம்மா ...!

நன்றி !

said...

அங்கே சிக்கல் சண்முகம் அழைத்தாராம் தில்லாணமோகனாளை
வியட்னாம் வீடு பத்மநாபன் அழைத்தாரம்
மாமியை
அதன் பப்பி அங்கு செற்றுள்ளார்