Wednesday, September 20, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

இன்னும் இருக்கிறது ஆதாயம் !


இன்னும் இருக்கிறது ஆதாயம் !

நாமெல்லாம் ஒரே இனம்,
ஆனால் எதையும் என் குலம்
அல்லாதவர்க்கு விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

நாமெல்லாம் இறைவனின் பிள்ளைகள்
ஆனால் என்கடவுளே உயர்ந்தவர்,
என்மதத்தை விட்டுகொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

அரசியல் வாதிகள் எல்லோரும் ஊழல் செய்பவர்கள்
ஆனால் என் கட்சியே சிறந்தது
என் தலைவரை விட்டுகொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

எல்லா மொழியும் சமமானது
ஆனால் என் மொழியே உயர்ந்தது
கருவரையை விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் !

20 : கருத்துக்கள்:

said...

போட்டியில் போட்டதா இல்லை புதுசா?

said...

அரசியல்வாதிங்க எல்லாரும் ஊழல் செய்பவர்கள் என்று சொல்லுறீங்களே...

இது உண்மையா ?

அப்பாவியாய்..

நாந்தான்..

said...

கடைசி நாலுவரிகள் சற்று தொடர்பற்று இருக்கிறது...அதாவது, மொழி பற்றி ஆரம்பித்து, மத-சாதியில் முடிப்பதற்கு பதிலாக, இன்னொறு 4 வரிகள் தனியாக சாதியை சாடியிருக்கலாமோ?

said...

அப்பாடா. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு எளிமையான ஆனால் ஆழ்ந்த பொருளுடையக் கவிதையைப் படிச்சாச்சு. நன்றி கோவி.கண்ணன் ஐயா.

said...

//பொன்ஸ் said...
போட்டியில் போட்டதா இல்லை புதுசா?
//
பொன்ஸ் போட்டிக்கு 'ஆகாயம்' அது வேற !

இது ஆதாயம் பற்றியது !

:)

said...

//செந்தழல் ரவி said...
அரசியல்வாதிங்க எல்லாரும் ஊழல் செய்பவர்கள் என்று சொல்லுறீங்களே...
இது உண்மையா ?
அப்பாவியாய்..
நாந்தான்.. //

ரவி...!
எல்லோரும் அல்ல 99 % அப்படித்தான் இருக்கிறார்கள் ரவி.

said...

//மெளல்ஸ், பெங்களூர் said...
கடைசி நாலுவரிகள் சற்று தொடர்பற்று இருக்கிறது...அதாவது, மொழி பற்றி ஆரம்பித்து, மத-சாதியில் முடிப்பதற்கு பதிலாக, இன்னொறு 4 வரிகள் தனியாக சாதியை சாடியிருக்கலாமோ?
//

மெளல்ஸ்...!
எல்லா சாதிகளும் கெட்டுப்போய் தான் இருக்கு !

என்னத்த செய்றது...! சாதியற்ற சமுதாயம் வேண்டும் என்று சொல்பவர்களேயானாலும் திருமணம் என்று வந்துவிட்டால் அதற்குள் தானே தேடுகிறார்கள்.

:(

said...

//குமரன் (Kumaran) said...
அப்பாடா. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு எளிமையான ஆனால் ஆழ்ந்த பொருளுடையக் கவிதையைப் படிச்சாச்சு. நன்றி கோவி.கண்ணன் ஐயா.
//

குமரன் ...!
ஆழ்ந்த பொருளா ? நான் எழுதியது அழுகிய பொருள்கள் பற்றி ...!
:))

said...

கவிதை மகிழ்ச்சியையும் கருப்பொருள் வருத்தத்தையும் தந்தது. ஹும்ம்..

said...

எல்லாருக்கும் தெரிந்த உண்மைகளைப் புட்டு வைத்திருக்கிறீர்கள்!
எளிமையாக!
படித்து மேலே செல்வோம் அவரவர் வழியில்!
ஏனெனில்..
இன்னும் இருக்கிறது ஆதாயம்!
:))

said...

GK,

ஆகா அருமை.. கலக்கிடீங்க..

//ஆனால் என் மொழியே உயர்ந்தது
கருவரையை விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் //

அதுவும் இந்த வரிகள் சூப்பர்..

said...

//மணியன் said...
கவிதை மகிழ்ச்சியையும் கருப்பொருள் வருத்தத்தையும் தந்தது. ஹும்ம்..
//

மணியன்,
கரும்பு சாறு, இனிப்பு, சக்கை துவர்ப்பு !
:)

said...

இன்னும் தேவையாய் இருக்கிறது ஆதாயம் என்றிருந்திருக்கலாமோ?

said...

SK said...
//எல்லாருக்கும் தெரிந்த உண்மைகளைப் புட்டு வைத்திருக்கிறீர்கள்!
எளிமையாக!
படித்து மேலே செல்வோம் அவரவர் வழியில்!
ஏனெனில்..
இன்னும் இருக்கிறது ஆதாயம்!
:))

11:41 AM
//

எஸ்கே ஐயா !

அவரவர் வலியில்!
ஏனெனில்..
இன்னும் இருக்கிறது ஆதாயம்!

என்று இருக்க வேண்டும் !

said...

******//Sivabalan said...
GK,

ஆகா அருமை.. கலக்கிடீங்க..
Sivabalan said...
GK,

ஆகா அருமை.. கலக்கிடீங்க..

//ஆனால் என் மொழியே உயர்ந்தது
கருவரையை விட்டுக்கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கிறது ஆதாயம் //

அதுவும் இந்த வரிகள் சூப்பர்..

8:25 PM


அதுவும் இந்த வரிகள் சூப்பர்..

8:25 PM
//******

சிபா...!
நன்றி...எதோ நம்மால் முடிந்த குழப்பத்தை ஏற்படுத்த முயலலாம் என்று தான் போட்டேன் !
:))

said...

//குமரன் எண்ணம் said...
இன்னும் தேவையாய் இருக்கிறது ஆதாயம் என்றிருந்திருக்கலாமோ?
//

குமரன் ...!

இன்னும் இருக்கிறது ஆகாயம்
இன்னும் இருக்கிறது ஆதாயம்

'கா'வுக்கு பதில் 'தா' போட்ட பின்பு எழுதினேன். ! தலைப்பு தான் எழுத தூண்டியது !

said...

கோ.க,
அருமையான கவிதை. யாதர்த்தத்தை மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

said...

கவிதை எழுதும் பல பதிவர்கள் கவிஞர்களே!
ஆனால் கோவி.கண்ணனின் கவிதையே சிறந்தது
என் அன்பு நண்பரை விட்டுக் கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கின்றது ஆதாயம்!

(பி.கு:இங்கு ஸ்மைலி போடவில்லை)

அன்புடன்...
சரவணன்.

said...

//வெற்றி said...
கோ.க,
அருமையான கவிதை. யாதர்த்தத்தை மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
//

வெற்றி அவர்களே !
தங்களின் மேலான பாராடுக்கு நன்றி !

said...

//உங்கள் நண்பன் said...
கவிதை எழுதும் பல பதிவர்கள் கவிஞர்களே!
ஆனால் கோவி.கண்ணனின் கவிதையே சிறந்தது
என் அன்பு நண்பரை விட்டுக் கொடுக்க மாட்டேன்
இன்னும் இருக்கின்றது ஆதாயம்!

(பி.கு:இங்கு ஸ்மைலி போடவில்லை)

அன்புடன்...
சரவணன்.
//

ஆகா சரா...!

என்ன தவம் செய்தனை பாராட்டு சிலிர்க்க வைக்கிறதே !
அதுவும் ஸ்மைலி போடாமால் என்று சொல்லி விட்டிர்கள்.

மகிழ்ச்சி, நெகிழ்சி ... பறக்க வைக்கிறது !