Sunday, December 31, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தேன் கூடு போட்டி முடிவுகள் - எஸ்கே

தேன்கூடு - தமிழோவியம் நடத்திய பதிவர்களுக்கான மாதாந்திர (இறுதி) போட்டியில்,

எனது கவிதை "குறும்பெல்லாம் குறும்பா?" [தேன்கூடு] வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. எனது குறும்பு கவிதையை படித்தும், பாராட்டியும், வாக்களித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் முதல் இரண்டு இடம் பிடித்த
அரைபிளேடு, நாமக்கல் சிபி அவர்களுக்கும் பாராட்டுக்கள். போட்டியை நன்றாக நடத்தி பதிவர்களை ஊக்குவித்த தேன்கூடு - தமிழோவியம் நிர்வாகத்தினருக்கு நன்றி !

முருகன் அருள் முன்நிற்கும்

மீண்டும் நன்றி


- எஸ்கே (ஆத்திகம்)


பதிவர் நண்பர் எஸ்கே ஐயா அவர்களின்
பதிவில் தொடர்ச்சியாக திருவெம்பாவை எழுதிவருவதால் இந்த பதிவு இங்கே இடம் பெறுகிறது !


இறுதி முடிவுகள்:

1 கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை - அரைபிளேட 52.2%
2 குறும்பு - நாமக்கல் சிபி 48.52%
12 குறும்பெல்லாம் குறும்பா? - sk 48.28%

வெற்றி பெற்ற மூவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், எனது போட்டிக்கதையை படித்து, பாராட்டி, வாக்களித்தவர்களுக்கு நன்றி !

- கோவி.கண்ணன்


12 : கருத்துக்கள்:

said...

கோவியாரே!

என் மீது அன்பு கொண்டு,
என் கருத்தை மதித்து
எனக்காக பதிவொன்று
என இன்று போட்ட
என் அன்பரை நினைந்து
என்னவெனச் சொல்வேன்?

மூன்றாம் பரிசெனினும்
முதல் பரிசெனவே மகிழ்வேன்
முன்னின்று வாக்களித்த
முழு நண்பர்க்கு நன்றி!
முனைப்பாக முடிவெடுத்த
மூவர் குழுவுக்கும் நன்றி!

திருவெம் பாவையினை
தொடர்ச்சியாக எழுதுவதால்
ஆத்திகத்தில் தனிப்பதிவு
போட முடியாததினால்
என் நண்பர் கோவியாரும்
இசைந்திங்கே பதிவிட்டார்

அவரன்பைப் போற்றுகின்றேன்
அவருக்குத் தொல்லை தருகின்றேன்
எவரென்ன சொன்னாலும்
மாற்றம் வேண்டுவதே எம் வாழ்வு
ஆனதினால், இம்மாற்றத்தினையும்
மனமுவந்து ஏற்கின்றேன்!

மறக்காமல் நீவிர் அனைவரும்
மனமுவந்து இங்கே வந்து
மகிழ்ச்சியையோ இகழ்ச்சியையோ
மனம் போலப் பதிவிடுவீர்
என்போல போட்டியிலே எழுதிட்ட
அனைவருமே வெற்றியாளரே!

நானிங்கே பரிசு பெறின்
நீவிர் அனைவருமே தகுதியாளரே!
ஏனிங்கு சொல்கிறேனென்றால்
போட்டியின் தன்மையினை
உணர்ந்ததாலே தான்!
போட்டியென எதுவுமில்லை
அனைவருமே வெற்றி பெற்றவரே!

எனை இங்கு பாராட்டி
எழுதவரும் பதிவர்க்கு,
இனி வரும் அனைத்திற்கும்
என் பதிலைச் சொல்வேன் நான்
என மட்டும் சொல்லி இங்கே
நன்றி சொல்லி முடிக்கின்றேன்!


நன்றி!
வணக்கம்!

said...

மூவருக்கும் என் வாழ்த்துகள்.

said...

வாழ்த்துக்கள்.

said...

//பதிவர் நண்பர் எஸ்கே ஐயா அவர்களின் பதிவில் தொடர்ச்சியாக திருவெம்பாவை எழுதிவருவதால் இந்த பதிவு இங்கே இடம் பெறுகிறது !//

அதனலென்ன - எங்களுக்கு நீங்கள் வேறு எஸ்.கே அய்யா வேறு என்ற எண்ணம்
ஒருபோதும் கிடையாது

பாராட்டுக்கள்!

said...

congrats SK.

said...

இனிய புத்தாண்டு, பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுடன்
போட்டியில் பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.

said...

நன்றி, குமரன், வெற்றி, சிறில் !

நண்பருக்கு இங்கே என்ன குறைவு!
தெரிந்தவர் பாராட்டுகையில் இன்னும் மகிழ்வு அதிகமாகிறது!

said...

ஆசானே!
அன்று முதல் இன்றுவரை சரியாக, தெளிவாகப் புரிந்து, பாராட்டும் உங்க்களுக்கு என் நன்றி!

said...

எஸ்கே, வாழ்த்துக்கள்!

தொடரட்டும் உங்கள் வெற்றிகள்.

said...

வாழ்த்துக்கள் எஸ்.கே ஐயா

said...

மிக்க நன்றி, ஓகையாரே!

புத்தாண்டு வாழ்த்துகள்!

said...

பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. சிந்தாநதி, திரு.ராம்!

உங்களது நான்காம் பரிசுக்கும் என் வாழ்த்துகள், ராம்!

புத்தாண்டு வாழ்த்துகள்!