Wednesday, July 26, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

தவளைச் சத்தம் !


காலங்கள் மாறி மழைக்காலம் வரும்போது
தவளைகள் சத்தமிடும் !

தவளைகளால் என்ன நன்மை என்று
யோசித்துப் பார்த்த போது ஒன்று
புரிந்தது ! இவைகளின் சத்தம் மட்டும்
இல்லாது போனால் இசையின்
இனிமை எனக்குத் தெரியாமலே
இருந்திருக்கும் !

தவளைகளுக்கும் நன்மை உண்டு !
கத்துவது தவளைத் தான் என்று
தவளைகள் இனம் கண்டு கொண்டு
ஆதரவு குரல் கொடுத்து தன் இன உணர்வை
வெளிப்படுத்துகிறது அல்லவா ?

வாலை இழந்திருந்தாலும் தவளைகளின்
சேட்டைகள் குறைவதில்லை !
அடுத்தவர் முதுகில் சவாரி செய்வதென்றால்
தவளைகளுக்கு அலாதி இன்பம் போல் !
பரிணாமம் பெற்று தேரையானாலும்
எதிர்ப்பாரத விதமாக எவர் முதுகிலாவது தாவி
தன்னை மகிழ்வித்துக் கொள்ளும் !

தவளைகளின் தனிச்சிறப்பென்று என்ன இருக்க முடியும் ?
தோலால் சுவாசிப்பதா ? அல்லது
கிணற்றுத் தவளைகளாக இருப்பதா ?

எனக்குத் தெரிந்தது கிணற்றுத்
தவளைகளுக்கு இருப்பது அற்ப பயம் !

கரையேறிவிட்டால் காணமல் போய்விடுமோ
என்ற வீன் பயம்விட்டு
எல்லாத் தவளைகளும் கரையேறினால்
பறந்த உலகத்தில் பரிணாமம் பெற்று
ஒருவேளை இறக்கை முளைத்துப் பறக்கலாம் !

தங்களின் சத்தம் இல்லாத வேளைகளில்
நினைத்துப் பார்க்குமா தவளைகள் ?

6 : கருத்துக்கள்:

said...

கோவி.கண்ணன் சார்

அருமை.. அருமை..

ஆனால் நீங்கள் சொல்லும் தவளை பல பேருக்கு பொருந்துவது தான் நிதர்சனம். காது கேளா தவளை கதை நியாபகத்துக்கு வந்தது.

said...

//Sivabalan said...
கோவி.கண்ணன் சார்

அருமை.. அருமை..

ஆனால் நீங்கள் சொல்லும் தவளை பல பேருக்கு பொருந்துவது தான் நிதர்சனம். காது கேளா தவளை கதை நியாபகத்துக்கு வந்தது. //

எனக்கு தவளைகள் மேல் தான் கவலை ! காது கேளாத தவளைகள் கதை எனக்குத் தெரியாது !

said...

முதுகில் தாவி ஏறுவது எதுக்குன்னு எனக்குத் தெரியுமே ;-))

தவளை கொண்டு மனிதம் பேசுவது போல் இருக்கிறது, எது எப்படியிருப்பினும் ஒன்றில்லாமல் பிரிதொன்று ஏது!!!

நல்ல இருந்துச்சு கோவி.

said...

கவிதை நன்றாக உள்ளது. தவளை பற்றியது கவிதை என்றாலும், இது தவளை பற்றிய கவிதை மட்டுமில்லை என்பதினால், நீங்கள் 'பின் நவீனத்துவ ' ஸ்பெஷலிஸ்ட் ஆகி விட்டீர்கள்.

said...

இரு மனம் கொண்டு
இரு குணம் கொண்டு
இருக்கின்ற வரையினில்
இறுமாப்பைத் துணைகொண்டு
இருக்கின்ற 'தவளைகளின்'
இறுமாப்பைக் குலைத்திடவே
இறுதிமணி அடிக்கும்
இரும்பான கவிதைகண்டு
இரும்பூது எய்துகிறேன்!

said...

//SK said...
இரு மனம் கொண்டு
இரு குணம் கொண்டு
இருக்கின்ற வரையினில்
இறுமாப்பைத் துணைகொண்டு
இருக்கின்ற 'தவளைகளின்'
இறுமாப்பைக் குலைத்திடவே
இறுதிமணி அடிக்கும்
இரும்பான கவிதைகண்டு
இரும்பூது எய்துகிறேன்!
//

ஒருமனம் கொண்டு
ஒருமலர் வாச நறுமணம் கண்டு
ஒருபுகழ் போற்றும் திருப்புகழ் பாடும்
ஒருவர் வந்து வாழ்த்தியதில்
ஒருவாறு முழுமை பெற்றதிந்த கவிதை !

எஸ்கே நன்றிகள் :)