மாயத் திரை

நான் பார்க்கும் உலகம் மிகக்
கொடியதாகவே இருக்கின்றது !
எங்கும் கோபம்,
எங்கும் வெறுப்பு,
எங்கும் பொறாமை,
எங்கும் ஏமாற்றம்,
எங்கும் வஞ்சனை,
எங்கும் கள்ளம் கபடம்!
எப்படி? எப்படி ? இதெல்லாம்
சகித்துக் கொண்டு வாழ்வது !
நடை பாதையில் எங்கும் முட்கள் !
எடுத்து வைத்த
அடுத்த அடி
அயற்சியை கொடுத்தது !
இப்படி
தினம் தினம் எதோ ஒன்றால்
அயர்ந்து போன நான்,
என் அழுக்கு ஆடையை களைந்து
நிலைக்கண்ணாடி முன் நிர்வாணமாக
நின்ற போது ,
மறைக்கப் பட்டிருந்த,
என் நிர்வாணத்தை சகிப்புத் தன்மையுடன்
நான் ரசித்த போது,
உலகத்தின் மீதான என் பார்வையில்
இருக்கும் குறைபாட்டை உணர்ந்து கொண்டேன் !