Sunday, March 04, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

வழிகளும் வலிகளும் !


இந்த வழி ஆபத்தானதல்ல
இதோ பார் எனக்கு நன்றாகவே
இருக்கிறது என்றார்
செருப்பணிந்த ஒருவர் !

காலுக்குச் செருப்பின்றி நடக்கும் நான்
அதே வழியில் முட்கள் கிடந்து
தைப்பதை உணர்ந்தேன்.
தெரிந்தவற்றை எடுத்து அப்புறப் படுத்தினேன்,
தெரியாதவைகள் தைத்து உதிரம் கொட்டியது !

சிலவற்றை எடுத்து வீசும் போது
வழியை தூய்மை படுத்தியதாக
எண்ணத்தில் இருந்தாலும்,
இந்த வழியில்
இத்தனை முட்களும் கற்களுமா
நான் செருப்பணிய முடியுமா ?
செருப்பணிவது எனக்கு எட்டாக்கனி
என்று அவர் எள்ளி நகையாடினார்.

இந்த செருப்பே வேண்டாம் !
என நினைத்து
ஒன்று பாதையை மாற்ற வேண்டும் அல்லது
பாதையை தூய்மைப் படுத்த போராட வேண்டும்
என நினைத்துக் கொண்டிருக்கும் போது
மீண்டும் எதிர்பட்ட
செருப்பணிந்தவர் சொல்கிறார்
என்னளவில் இந்த வழி நல்வழியே !
இதில் மாற்றம் தேவை இல்லை !

எப்போதும்,
நன்மை - தீமை என்ற பகுப்பில்,
பார்வையில் காணாமல் போகிறது
உண்மைகள் !

4 : கருத்துக்கள்:

said...

கவிதையின் கருத்து மிக நன்றாக உள்ளது

said...

Gk,

நல்ல கவிதை!!

வாழ்த்துக்கள்

said...

if you want to win, change the rules of the game or set your own rules :)

said...

அப்படியே ஒரு '+'