Friday, March 30, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

புதிய தேசீய கீதம் !





நாமெல்லாம் இந்தியர்கள்,
இந்தியர் என்றால் இந்துக்கள்,
'இந்தூ'ய தேசீ'யம் காப்போம்
இந்தியனாக இருப்போம்
இந்து கடைகளிலேயே பொருட்கள்
வாங்குவோம்,
பிச்சை எடுத்தாலும் மாதாகோவில்களிலோ,
தர்காக்களிலோ எடுப்பதை வெறுப்போம் !


பகவானுக்கு முன்னால்
இந்துக் கோவில்களின் வாசலில் மட்டும்
அமர்ந்து பிச்சை எடுப்போம்
நாமெல்லாம் வெறும் இந்தியர்கள் மட்டுமல்ல
இந்தியர்கள் என்றால் இந்துக்கள் !



பி.கு : அரைகுறையாக புரிந்து கொண்டு நண்பர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். இப்பெல்லாம் தேசியம் பற்றி பேசுவதுதான் டிரெண்ட் அது என்ன மாதிரி தேசீயம் என்று சொல்ல முயன்றேன்.

1 : கருத்துக்கள்:

said...

வெறுக்கவில்லை ஐயா!
அங்கிருந்து தள்ளப்படுகிறோம்!
பிச்சை எடுப்பவனுக்கு இடம் என்ன!
இருக்க இடம் கொடுங்கள்!
எங்கு வேண்டுமானாலும் எடுக்கிறோம்
.......பிச்சை!

நாமெல்லோரும் இந்தியர்கள்!
நீரதை உணர்வீர்!
இந்நினைவகற்றாதீர்!