Wednesday, March 07, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

மங்கையர் நன்னாள் !

தாய் மனைவி மகள் என
என் மூன்று காலங்களிலும் நீயே
நீக்கமற நிறைந்திருக்கிறாய் !

உன் கருவரையில் தான்
எம் குலதெய்வங்கள்
உயிரும் உடலும் பெறுகிறது !

இருவருக்காக உண்ணும் ஒருவர்
என்ற சிறப்புத் திறனும்
உன்னிடம் மட்டுமே இருக்கிறது !

அமுத சுரபியும், அட்சய பாத்திரமும்
வைத்துக்கொண்டு அள்ளி அள்ளிக் கொடுத்து
பசி பினி நோய் தீர்ப்பவள் நீ !

பேற்றிற்காக தன்குறியை அறுத்தும்
வயிற்றைக் கிழித்தும் நீ செய்யும்
தியாகம் போற்றதக்கது !

தன்னை மறந்து வாழ்நாள்
முழுதும் குடும்ப நலனுக்காக வாழும் நீ
பிறக்கும் போதே பேறு அடைந்தவள் !

உன் அருமையும், பெருமையும் அறிந்தே
நதியாய், நிலமாய், நிலவாய்
உன்வடிவம் உருவகமாக போற்றப்படுகிறது !

இறையென்ற சக்திக்கு நீயே சக்தி !
கறையொன்றும் இல்லைப் பெண்ணே !
எல்லாவற்றிலும் நீயே நிறை !

அனைத்து பெண்களுக்கும் மகளிர் நன்னாள் வாழ்த்துக்கள் !


அன்புடன்,

கோவி.கண்ணன்

2 : கருத்துக்கள்:

said...

நன்றி கோவி அவர்களே..அருமையா இருக்கு ...

said...

GK,

நல்ல கவிதை!!

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்