Sunday, January 28, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

காலத்தின் களம் மாறிவிட்டது !


கெட்டதுக்கும் காலம் உண்டு,
நல்லதுக்கும் காலம் உண்டு,
எல்லோருக்கும் காலம் உண்டு !

எழுச்சியும் வீழ்ச்சியும் காலத்திலுண்டு,
துக்கமும் மகிழ்ச்சியும் காலத்திலுண்டு,
ஹிட்லரும் ஹிரோசிமாவும் காலத்திலுண்டு
அலெக்சாண்டரும் நெப்போலியனும் காலத்திலுண்டு
ஏசுபிரான் முகமது நபி காலத்திலுண்டு
புத்தபிரான் சமணமுனி காலத்திலுண்டு
கண்ணபிரான் ஆதிசங்கரர் காலத்தில் உண்டு
அன்னை தெரசாவும், சாரதா தேவியும் காலத்திலுண்டு
உயர்ந்தவர்கள் தாழ்ந்ததுவும் காலத்திலுண்டு
தாழ்த்தபட்டவர்கள் உயர்ந்ததுவும் காலத்திலுண்டு
காலம் தவிர்த்து காலத்தின் நிகழ்வுகள் காலமாவதுண்டு !

காலம் ஊடே செல்வது வெறும் நிகழ்வுகள்
நல்லவை கெட்டவை என்பது காலத்துக்கு இல்லை
அது நம் கண்களுக்கும், மனத்துக்கும் மட்டுமே !

பி.கு: திடீர் பில்ட் அப் புது ப்ளக்கர் மாற்றியதற்காக :)

1 : கருத்துக்கள்:

said...

கவிதையயை விட நீங்க போட்ட படம் நல்லாயிருக்குது