Thursday, December 03, 2009
Monday, October 12, 2009
தாய்மை !

அப்பாவுக்கு மகிழ்வுடன்
"டாடா" காட்டும்
எந்த ஒரு குழந்தையும்,
அம்மாவுக்கு
"டாடா" காட்டும் போது
மட்டுமே அழுகின்றது.
குறிசொற்கள்
கவிதைகள்
Sunday, August 02, 2009
நண்பர்கள் நன்னாள் கவிஜை !
நன்றாகப் படிக்கிறேன் கவலைப்படாதிங்க,
சீக்கிரம் வேலை கிடைச்சிடும் கவலைப்படாதிங்க,
உடம்புக்கு ஒண்ணும் இல்லை அனத்தாதீர்கள்,
என்றெல்லாம் உறவுகளிடம் சொன்னாலும்
படிக்கவே பிடிக்கவில்லை,
வேலைத் தேடுவது கஷ்டமாக இருக்கிறது,
மனசும் சரி இல்லை,
உடம்பும் சரி இல்லை
என்ற உண்மைகளுடன்,
பருவச் சீற்றத்தின் தணிப்புக்காக
அங்கு சென்று வந்ததிலிருந்து
"அங்கு" எரிகிறது என்று நண்பனிடம் தான் சொல்லமுடிகிறது.
- அன்புடன்
கோவியார்.
பின்குறிப்பு : யூசுப் பால்ராஜ் ஐயங்கார், கீழ்கண்ட படத்துடன் கவிஜையை மொக்கை மின் அஞ்சலில் அனுப்ப, எனக்குள்ள தூங்கிக்கொண்டு இருந்த கவிஜன் விழித்துக் கொண்டான்.
சீக்கிரம் வேலை கிடைச்சிடும் கவலைப்படாதிங்க,
உடம்புக்கு ஒண்ணும் இல்லை அனத்தாதீர்கள்,
என்றெல்லாம் உறவுகளிடம் சொன்னாலும்
படிக்கவே பிடிக்கவில்லை,
வேலைத் தேடுவது கஷ்டமாக இருக்கிறது,
மனசும் சரி இல்லை,
உடம்பும் சரி இல்லை
என்ற உண்மைகளுடன்,
பருவச் சீற்றத்தின் தணிப்புக்காக
அங்கு சென்று வந்ததிலிருந்து
"அங்கு" எரிகிறது என்று நண்பனிடம் தான் சொல்லமுடிகிறது.
- அன்புடன்
கோவியார்.
பின்குறிப்பு : யூசுப் பால்ராஜ் ஐயங்கார், கீழ்கண்ட படத்துடன் கவிஜையை மொக்கை மின் அஞ்சலில் அனுப்ப, எனக்குள்ள தூங்கிக்கொண்டு இருந்த கவிஜன் விழித்துக் கொண்டான்.

குறிசொற்கள்
கவிதைகள்
Wednesday, July 29, 2009
கருமையின் நிறம் !

ஆரவாரமற்ற இருட்டில்
தனிமை சூழ்ந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தபடி
முற்றும் துறந்த மனதுடன்
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.
காய்ந்த மனதில்,
பொறுக்கி வைத்த சுள்ளிகளாக
கடந்து போன நினைவுகளின்
தீப் பிடித்து எரிந்து மீந்த சாம்பலாக
கடந்த காலம்
பாழடைந்த கிணற்றின்
சிதலமடைந்த சுவற்றின் விழாத நம்பிக்கையில்
பெருந்துளையில் வளர்ந்து கொண்டிருந்த
ஆல விருட்ச எண்ணங்கள்
மழை நேரத்தில் கரைந்தொழுகும்
புற்றின் ஈரமணலில் நெளிந்து துடிக்கும்
கரையான்களின் கடைசி நேர முயற்சியாக
துடித்துக் கொண்டிருந்த என் மனதில்
இதற்கும் மேல் பின் நவீனத்துவக் கவிதை
எப்படி எழுதவேண்டும் என்று தெரியாததால்
வெயில் காலத்து ஆற்று நடுமுதுகின் பதிந்த மணல்களை
பேய்காற்று பீய்த்தெரிந்து வரண்ட திட்டாக்கும் திட்டத்துடன்
ஒவ்வொரு முடிகளாக பிய்த்துக் கொண்டிடிருந்தது
விரல்கள் !
- இது கவிஜையான்னு கேட்கிறவங்க...முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்க... தலைப்புக்கும் கவிஜைக்கும் என்ன தொடர்ப்புன்னு சொல்லுங்க...எனக்கு தெரியவில்லை :)
தனிமை சூழ்ந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தபடி
முற்றும் துறந்த மனதுடன்
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.
காய்ந்த மனதில்,
பொறுக்கி வைத்த சுள்ளிகளாக
கடந்து போன நினைவுகளின்
தீப் பிடித்து எரிந்து மீந்த சாம்பலாக
கடந்த காலம்
பாழடைந்த கிணற்றின்
சிதலமடைந்த சுவற்றின் விழாத நம்பிக்கையில்
பெருந்துளையில் வளர்ந்து கொண்டிருந்த
ஆல விருட்ச எண்ணங்கள்
மழை நேரத்தில் கரைந்தொழுகும்
புற்றின் ஈரமணலில் நெளிந்து துடிக்கும்
கரையான்களின் கடைசி நேர முயற்சியாக
துடித்துக் கொண்டிருந்த என் மனதில்
இதற்கும் மேல் பின் நவீனத்துவக் கவிதை
எப்படி எழுதவேண்டும் என்று தெரியாததால்
வெயில் காலத்து ஆற்று நடுமுதுகின் பதிந்த மணல்களை
பேய்காற்று பீய்த்தெரிந்து வரண்ட திட்டாக்கும் திட்டத்துடன்
ஒவ்வொரு முடிகளாக பிய்த்துக் கொண்டிடிருந்தது
விரல்கள் !
- இது கவிஜையான்னு கேட்கிறவங்க...முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்க... தலைப்புக்கும் கவிஜைக்கும் என்ன தொடர்ப்புன்னு சொல்லுங்க...எனக்கு தெரியவில்லை :)
குறிசொற்கள்
கவிதைகள்,
பின்னவீனத்துவம்
Thursday, May 07, 2009
பட்டையைக் கிளப்பும் ஜெ, பதுங்கும் திமுக கூட்டணி
கத்திரி வெயிலில் மேலும் சூட்டைக் கிளப்பும் வகையில் ஜெ வின் பேச்சும் தேர்தல் பரப்புரை பயணமும் அமைந்திருக்கிறது. கட்சி சாராது திமுக அனுதாபிகளாக இருந்த (என்போன்றோர்கள்) ஜெ வின் பேச்சை வெகுவாக ரசிக்கின்றனர். திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க ஜெ-வால் தான் முடியும் என்கின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டச் சிறப்புகளைச் சொல்லிவிட்டு, அந்த மாவட்டத்தில் அதிமுக காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைச் சொல்லி, திமுகவின் மீதும் தமிழக திமுக கூட்டணி தலைவர் மீது சரமாரி ஏவுகனைக் குற்றச் சாட்டு தாக்குதல் தொடுக்கிறார். 'மக்களை சந்திக்க பயந்து போய் மருத்துவ மனையில் படுத்துக் கொண்டார் கருணாநிதி, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி ஓய்வு கொடுங்கள் ' என்கிற ஜெவின் அட்டாக் திமுகவினரை பெரிதாகவே தாக்கி இருப்பது ஸ்டாலின் 'நாகரீகமற்றவராக பேசுகிறார் ஜெ' என்ற பதில் பேச்சில் தெரிகிறது.
தேர்தல் பரபரப்பில் பரப்புரை (பிரச்சார) பயணம் செய்வதில் பிறகட்சியினரைக் காட்டிலும் ஜெ மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். கருணாநிதி காங்கிரசுகாரர்களான காமரசரை 'காமராசரின் வாடகை வீட்டை படம் பிடித்த கருணாநிதி ஏழையின் வீட்டைப் பாரிர் என்று முரசொலியில் படம் போட்டு அவமானப்படுத்தினார், பக்தவச்சலத்தை பத்துலட்சம் பக்தவச்சலம்' என்று சொன்னார்' என்று காங்கிரசையும் திமுகவையும் பற்ற வைத்தார் ஜெ, வழக்கமாக கருணாநிதி மட்டுமே பழசை கிண்டி கிண்டி பேசுவார். ஜெவின் ஈழம் பற்றி தெளிவான பேச்சு பலரைக் கவர்ந்திருக்கிறது
ஜெ-வின் தேர்தல் உத்தி சிறப்பாகவும் கவனம் ஈர்பாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். திமுக திணருவதைப் பார்க்கும் போது கட்சி சார்பில்லாமல், தொண்டராக இல்லாமல் இருக்கும் திமுக அனுதாபிகள் திமுகவின் நிலை குறித்து பரிதாபப்படுகின்றனர். நானும் தான் :)
ஜெ என்றால் வெற்றி என்று மீண்டும் நிருபணம் செய்துவிடுவார் என்று நன்றாகவே தெரிகிறது.
கருணாநிதி கர்ணனாக இருந்தாலும் கூட்டு சேர்ந்தது துரியோதனர்களிடம் என்பதால் தற்போதைக்கு திமுக கூட்டணி பற்றி அனுதாபம் மட்டுமே படமுடிகிறது. சோனியா தமிழக (காங்கிரஸ் மற்றும் திமுக) ஆதரவை பெரிதாக கணக்கிட்டுக் கொள்ளவில்லை, எனவே தேர்தலுக்கு பிறகு திமுகவை கழட்டிவிடுவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக சோனியாவின் தமிழக பரப்புரை பயணம் நிறுத்தப்பட்டதை வைத்து பார்வையாளர்கள் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
ஜெ... ஜெ... என தமிழுணர்வாளர்களை இந்த தேர்தல் முடிவு உற்சாகப்படுத்தும் என்று தெரிகிறது.
(தேர்தல் முடிவு மட்டும் தானா உற்சாகப்படுத்தும் அதன் பிறகுமா ? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்)

தேர்தல் பரபரப்பில் பரப்புரை (பிரச்சார) பயணம் செய்வதில் பிறகட்சியினரைக் காட்டிலும் ஜெ மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். கருணாநிதி காங்கிரசுகாரர்களான காமரசரை 'காமராசரின் வாடகை வீட்டை படம் பிடித்த கருணாநிதி ஏழையின் வீட்டைப் பாரிர் என்று முரசொலியில் படம் போட்டு அவமானப்படுத்தினார், பக்தவச்சலத்தை பத்துலட்சம் பக்தவச்சலம்' என்று சொன்னார்' என்று காங்கிரசையும் திமுகவையும் பற்ற வைத்தார் ஜெ, வழக்கமாக கருணாநிதி மட்டுமே பழசை கிண்டி கிண்டி பேசுவார். ஜெவின் ஈழம் பற்றி தெளிவான பேச்சு பலரைக் கவர்ந்திருக்கிறது
ஜெ-வின் தேர்தல் உத்தி சிறப்பாகவும் கவனம் ஈர்பாகவும் இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். திமுக திணருவதைப் பார்க்கும் போது கட்சி சார்பில்லாமல், தொண்டராக இல்லாமல் இருக்கும் திமுக அனுதாபிகள் திமுகவின் நிலை குறித்து பரிதாபப்படுகின்றனர். நானும் தான் :)
ஜெ என்றால் வெற்றி என்று மீண்டும் நிருபணம் செய்துவிடுவார் என்று நன்றாகவே தெரிகிறது.
கருணாநிதி கர்ணனாக இருந்தாலும் கூட்டு சேர்ந்தது துரியோதனர்களிடம் என்பதால் தற்போதைக்கு திமுக கூட்டணி பற்றி அனுதாபம் மட்டுமே படமுடிகிறது. சோனியா தமிழக (காங்கிரஸ் மற்றும் திமுக) ஆதரவை பெரிதாக கணக்கிட்டுக் கொள்ளவில்லை, எனவே தேர்தலுக்கு பிறகு திமுகவை கழட்டிவிடுவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாக சோனியாவின் தமிழக பரப்புரை பயணம் நிறுத்தப்பட்டதை வைத்து பார்வையாளர்கள் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
ஜெ... ஜெ... என தமிழுணர்வாளர்களை இந்த தேர்தல் முடிவு உற்சாகப்படுத்தும் என்று தெரிகிறது.
(தேர்தல் முடிவு மட்டும் தானா உற்சாகப்படுத்தும் அதன் பிறகுமா ? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்)
குறிசொற்கள்
அரசியல்,
தேர்தல்,
தேர்தல் 2009
Thursday, March 26, 2009
தேர்தல் உடன்படிக்கை !
தேர்தல் வந்துவிட்டது,
எந்த அலையும் வீசவில்லை
என்கிறார் முதல்வர்
விலைபோகும் அளவுக்கு
இடைத் தேர்தல் அல்லதான் !
இலவச வலைகளால்
உங்களுக்கே வாக்குகள் கிடைக்கலாம்,
இன்னும் கூட வாக்குக்கு வழியுண்டு,
ஈழவர்களின் நலனுக்கு தீக்குளித்த
கட்சிக்காரர்களின் கருகிய படம் இருந்தால்
ஆளுக்கு 4 தொகுதிகள்
ஆளும் கட்சிக்கு கூட்டணிக்கு கிடைக்கலாம் !
தேர்தல் உடன்படிக்கைபடி
முத்துக்குமாரின் படம் யாருடைய
பிரச்சாரத்துக்கு என்கிற கேள்விக்கு
யாருக்கும் இன்னும் விடைதெரியவில்லை !
எந்த அலையும் வீசவில்லை
என்கிறார் முதல்வர்
விலைபோகும் அளவுக்கு
இடைத் தேர்தல் அல்லதான் !
இலவச வலைகளால்
உங்களுக்கே வாக்குகள் கிடைக்கலாம்,
இன்னும் கூட வாக்குக்கு வழியுண்டு,
ஈழவர்களின் நலனுக்கு தீக்குளித்த
கட்சிக்காரர்களின் கருகிய படம் இருந்தால்
ஆளுக்கு 4 தொகுதிகள்
ஆளும் கட்சிக்கு கூட்டணிக்கு கிடைக்கலாம் !
தேர்தல் உடன்படிக்கைபடி
முத்துக்குமாரின் படம் யாருடைய
பிரச்சாரத்துக்கு என்கிற கேள்விக்கு
யாருக்கும் இன்னும் விடைதெரியவில்லை !

குறிசொற்கள்
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)