Sunday, November 19, 2006

தமிழ்மணம் கருவிபட்டை

கோடி நன்மைகள் இலவசம் (கவிதை) ! தே.கூ.போட்டி



இலவசம், இலவசம்,

பிறப்பில் வாழ்க்கை இலவசம், நாம்
வாழும் காலமும் இலவசம் !

மென்மை இதயம் இலவசம், அதில்
அன்பு ஊற்றும் இலவசம் !

கையில் விரல்கள் இலவசம்,
கை கோர்க்க நல்மனமும் இலவசம் !

கால்கள் இரண்டும் இலவசம், அதன்
நல்வழிப் பாதைகளென்றும் இலவசம் !

கண்கள் இரண்டும் இலவசம், அது
காணும் வண்ணங்கள் யாவும் இலவசம் !

கண்களில் கண்ணீர் இலவசம், கரைப்பவர்
நெஞ்சம் அடையும் அமைதி இலவசம் !

வாயில் பற்கள் இலவசம், அதில்
தவழும் புண்ணகை இலவசம் !

நாக்கில் நன் சொல் இலவசம், அதை
நயமுடன் சொல்ல நாடிவருபவர் இலவம் !

மனதில் உறுதி இலவசம், அதை
திடமுடன் நடத்த வெற்றி இலவசம் !

மூளையில் நியூரான்கள் இலவசம், அதை
தூண்டுவோர்க்கு ஏற்படும் (பகுத்)அறிவு இலவசம் !

காதுகள் இரண்டும் இலவசம், அது
கேட்கும் கானக்குயிலின் பாடல் இலவசம் !

இரவில் தூக்கம் இலவசம், அந்த
தூக்கத்தில் காணும் கனவுகள் இலவசம் !

எண்ணத்தில் இனிமை இலவசம், அதுபுகும்
உள்ளத்தில் மகிழ்ச்சி இலவசம் !

ஒளிதரும் சூரியன் இலவசம், அதன்
சுகம்தரும் மித வெட்பம் இலவசம் !

மேக ஓடைகள் இலவசம், அதுதரும்
தாக நீர்த்துளி இலவசம் !

வான வீதிகள் இலவசம், அதில்
கண்மயக்கும் வின்மீன் தோரணம் இலவசம் !

மலையின் நீர்வீழ்ச்சி இலவசம், அது
நடந்தால் பொங்கும் ஆறுகள் இலவசம் !

இரவில் நிலவு இலவசம், அதன்
இரவல் குளிர் ஒளி இலவசம் !

கடல்கரை அலைகள் இலவசம், அது நம்
கால் தொட சிலிர்ப்புகள் இலவசம் !

உழைப்பில் வியர்வை இலவசம், இவை
சேர்ந்தால் உடல் நலம் இலவசம்

தாயின் கருவரை இலவசம், அதில் வளர்ந்திட
தாய் தரும் உதிரம் இலவசம் !

தலைகோதும் தாயன்பு இலவசம், அவள்
முலைதரும் தாய்ப் பாலும் இலவசம்

அப்பாவின் பாசம் இலவசம், அவர்
தப்பாமால் செய்யும் கடமைகள் இலவசம் !

பிறப்பில் இளமை இலவசம், இளமையில்
ஊற்றெடுக்கும் சுறுசுறுப்பு இலவசம் !

வாழ்வில் முதுமை இலவசம், முதமைதன்
போக்கில் வரும் மரணம் இலவசம் !

புலன்களில் உணர்வுகள் இலவசம், அதை
கட்டுக்குள் வைக்க இன்பங்களணைத்தும் இலவசம் !

நட்பில் நம்பிக்கை இலவசம், நாடிபோற்றினால்,
எவர் வசமும் நமக்கு இலவசம் !

காதலில் அன்பு இலவசம், அதில்
காணும் பரவசம் இருவருக்கும் இலவசம் !

கூடி வாழும் மனம் இலவசம், இருந்தால்
கோடி நன்மைகள் இலவசம் !


பின்குறிப்பு : ஆருயிர் நண்பர் எஸ்கே ஐயா அவர்களின் இலவச போட்டிக்கு சிறிய அளவில் பின்னூட்டமாக இட்ட கவிதை இலவசமாக வளர்ந்து, அதே தேன் கூடு போட்டிக்காக வளர்ந்திருக்கிறது !

10 : கருத்துக்கள்:

said...

GK,

//பிறப்பில் வாழ்க்கை இலவசம், நாம்
வாழும் காலமும் இலவசம் !//

எவ்வளவு அருமையான வரிகள்..

அருமை.. அருமை..

மீன்டும் GKயின் கவிதைகளை வாசிக்க கிடைத்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

நன்றி

said...

//எவ்வளவு அருமையான வரிகள்..

அருமை.. அருமை..

மீன்டும் GKயின் கவிதைகளை வாசிக்க கிடைத்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

நன்றி //

சிபா...!
முதலில் வந்து பாராட்டியதற்கு மற்றற்ற மகிழ்ச்சி !

மறக்காம தேன் கூட்டில் ஓட்டு போட்டுவிடுங்கள் !
:)

said...

கோவியாரே!

வெகு நாட்களுக்குப் பிறகு உம்மை உமது பதிவில் சந்திப்பது மகிழ்ச்சி!

கவிதை அருமையாக உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

இல்வசமாய் என் பின்னூட்டமும், வாழ்த்துக்களும்.

said...

இது போன்ற அருமையான கவிதைகள் தமிழ்மணத்தில் இலவசம்

:-))நல்லா இருக்கு கோவி சார்

said...

//மேக ஓடைகள் இலவசம், அதுதரும்
தாக நீர்த்துளி இலவசம் !
//

நல்ல தமிழ் விளையாட்டு கோவி.கண்ணன்

கோவி.கண்ணன், கவிதை ரொம்ப நல்ல இருக்கு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

said...

//நாமக்கல் சிபி @15516963 said...
கோவியாரே!

வெகு நாட்களுக்குப் பிறகு உம்மை உமது பதிவில் சந்திப்பது மகிழ்ச்சி!

கவிதை அருமையாக உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

இல்வசமாய் என் பின்னூட்டமும், வாழ்த்துக்களும்.
//

நெகிழ்வான பின்னூட்டத்திற்கு நன்றி
நாமக்கல்லாரே !
:)

said...

//மு.கார்த்திகேயன் said...
நல்ல தமிழ் விளையாட்டு கோவி.கண்ணன்

கோவி.கண்ணன், கவிதை ரொம்ப நல்ல இருக்கு.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
//

கார்த்திகேயன் அவர்களே, பாராட்டுக்கும், வெற்றி வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி, நன்றி !

said...

//மங்கை said...
இது போன்ற அருமையான கவிதைகள் தமிழ்மணத்தில் இலவசம்

:-))நல்லா இருக்கு கோவி சார்
//

மங்கை அவர்களே ...!
பாராட்டுக்கு நன்றி !

said...

அன்புள்ள கோவி.கண்ணன்,

இப்படியும் சிந்திக்க முடியுமா? அருமையான வரிகள் கொண்ட நல்ல கவிதை.

மற்றபடி வாக்களிக்கவில்லை என வருத்தம் வேண்டாம். ஆரியர்கள் நடத்தும் தேன்கூட்டில் எனக்கு கணக்கு இல்லை!

said...

// விடாதுகருப்பு said...
அன்புள்ள கோவி.கண்ணன்,

இப்படியும் சிந்திக்க முடியுமா? அருமையான வரிகள் கொண்ட நல்ல கவிதை.

மற்றபடி வாக்களிக்கவில்லை என வருத்தம் வேண்டாம். ஆரியர்கள் நடத்தும் தேன்கூட்டில் எனக்கு கணக்கு இல்லை!
//

திரு வி.க,

எல்லாம் உட்கார்ந்து யோசிக்கிறதுதான் !
:))

ஓட்டு போடவில்லை என்றால் பராவாயில்லை. ஒரு ஓட்டில் பரிசுகிடைக்கவில்லை என்றால் பார்போம் !
:)