Sunday, February 04, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

காவேரி பெண்ணே வா வா!



புகுந்த வீடா ?
பிறந்த வீடா ?
தஞ்சை தரணியில் உன்
புணர்ச்சி வேண்டி
வானம் பார்த்த பூமி
முப்போகத்திற்கு வேண்டி
நிற்க,

நிறைமாத கர்பம் ஒவ்வொரு ஆண்டும்
வேண்டும் என
மேட்டுர் அணை வேண்டி நிற்க,

கையளவு நீராவது
கடல் மணலை நெனைக்காதா
என பூம்புகார் கடற்கரை காத்திருக்க,

வரம் தரும் சாமியாக,
நீதிதேவன் தீர்ப்பு
இன்னும் சில மணித்துளிகளில்...

வாழாவெட்டியாக பிறந்த வீட்டில்
சிறைபட்டுக் கிடக்கும் உன்னை
இன்றாவது உன்வீட்டார்
தடுத்துவைத்தற்காக சீர்கொடுத்து
சீராக உன்னை
புகுந்தவீட்டிற்கு அனுப்புவார்களா ?



காவேரி நீர் பங்கிடு குறித்து ஞாயம் வெற்றிபெற வேண்டுவோம், வாழ்த்துவோம் !

0 : கருத்துக்கள்: