Friday, March 21, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

கண்ணாடியின் கறை !



கண்ணாடியின் கறை !

பரண் மேல்,
ஒரு கால் உடைந்த நாற்காலி,
தூசிபடிந்த பழைய புத்தகங்கள்,
காய்ந்த மாலையுடன்
பொட்டு வைக்கப்பட்ட அம்மாவின்
கருப்பு வெள்ளை புகைப்படம்
ரிடையர்ட் ஆன அப்பாவின்
வழியனுப்பு புகைப்படம்,
நான் பட்டம் வாங்கியதும்
பெற்றோர்களுடன் ஆசி வாங்கிய படம்
என என்னைச் சூழ்ந்துள்ள,
பழமைகள் என்றுமே இனிமை
கலந்த
பசுமை நினைவுகள் தான் !

- செந்தூரன்

இதோ இந்த
வார இதழில் பாருங்கள்,
என் பையன்
உயிரோட்டத்துடன் அழகாக
கவிதைகள் எழுத
ஆரம்பித்துவிட்டான்,
பெருமையாகக் கூறிக் கொண்டு
இருந்தார் முதியோர்
இல்லத்தில் இன்னொரு பெரியவரிடம்
ஒரு பெரியவர் !

1 : கருத்துக்கள்:

said...

//இதோ இந்த
வார இதழில் பாருங்கள்,
என் பையன்
உயிரோட்டத்துடன் அழகாக
கவிதைகள் எழுத
ஆரம்பித்துவிட்டான்,
பெருமையாகக் கூறிக் கொண்டு
இருந்தார் முதியோர்
இல்லத்தில் இன்னொரு பெரியவரிடம்
ஒரு பெரியவர் !//

அருமை! அருமை!!

அன்புடன்,
ஜோதிபாரதி.