Wednesday, November 14, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

திகட்டலின் ஏக்கம் !




நன்கு திகட்டிய உணவை
மற்றொரு நாள் சுவைக்க
எழும் ஏக்கத்தைபோல்,

புளித்துப் போனவை என்று
ஒதுக்கியவை கூட,
என்றோ ஒரு நாள் நினைவில்
இனிக்கத்தான் செய்கிறது !

இனி எதும் வேண்டாம் என்ற
வீராப்புகளை, உறுதிகளை
எடுக்கத் தூண்டுகின்ற உராய்வினால்
ஏற்பட்ட சிராய்ப்பின்,

குறுதி காய்ந்ததும்,
என்றோ ஒரு நாள் அதன் மேல்
அடிக்கும் மெல்லிய தென்றல்
காயங்களை வருடிவிட்டுச்
செல்கின்றன.

காயங்களின் அடையாளம் ?
வெறுப்பை மட்டுமா சுமக்கிறது ?
எண்ணிப்பார்த்தால் ஏமாற்றம் !

காயத்தளும்புகளின் மேல் ஒவ்வொரு
மெல்லிய வருடலும்
காயமற்ற காலங்களையும்
கிளறி காட்டிவிட

அதன் சிலிர்பலையில்
அதே திகட்டிய உணவை
மீண்டும் சுவைக்க
ஏங்குகிறது எண்ணங்கள் !

2 : கருத்துக்கள்:

said...

அனுபவித்துப் பாராட்டுவது
அரிமா இளங்கண்ணன்!

said...

//Arima Ilangkannan said...
அனுபவித்துப் பாராட்டுவது
அரிமா இளங்கண்ணன்!
//

பாராட்டுக்கு நன்றி ஐயா !