Tuesday, September 16, 2008

தமிழ்மணம் கருவிபட்டை

சிங்கை பதிவர் சந்திப்பு நினைவூட்டல் !

வரும் சனிக்கிழமை மாலை 3 மணி முதல் வீட்டில் இருந்து 'இப்ப வர்றிங்களா இல்லையா ?' என செல்பேசி மிரட்டல் வரும் வரை சிங்கை புக்கிட் கொம்பா எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் பதிவர் சந்திப்பு நடை பெற இருப்பதாக ஏற்கனவே ஜோசப் பால்ராஜ் பதிவில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

சென்ற முறை சந்திப்புகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்ததால், ஏன் சனிக்கழைமைக் கூட வைக்கலாமே என கேட்டு கலக குறல்கள் ?:))) எழுந்ததால், இந்த முறை சனிக்கிழமை வைக்கலாம் என்று பதிவர்களால் ஒருமனதாக தீர்மாணிக்கப்பட்டு இருக்கிறது.

இடம் : புக்கிட் கொம்பா எம்ஆர்டி நிலையம்

நேரம் : மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

சந்திப்பு ஏற்பாட்டாளர்கள் : சிங்கை நாதன் செந்தில் மற்றும் ஜோசப் பால்ராஜ்

சந்திப்பின் கருப்பொருள் : எங்கே செல்லும் பதிவர் பாதை ?

விவாதம் : வலைப்பதிவில் இருந்து ஓய்வு பெறுவது எப்படி ? - வலைப்பதிவாளர் கோவி.கண்ணனின் சிறப்புரையுடன் தொடங்கி வைக்கப்படும்

சந்திப்பின் தீர்மானம் : புதிய பதிவர்களின் எழுத்துக்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவது

நிகழ்ச்சி ஆரம்பம் : மாலை 3 மணி
இளைப்பாறுதல் : அவ்வப்போது
தேனீர் இடைவேளை : மாலை 5 மணி

இந்த முறை முந்தைய சந்திப்புகளில் விடுபட்ட பதிவர்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள்:

ஜோசப் பால்ராஜ் : +65 - 93372775
கோவி.கண்ணண் : +65 - 98767586
ஜெகதீசன் : +65 - 90026527

3 : கருத்துக்கள்:

said...

எனக்கு முக்கியமான சில பல வேலைகள் இருப்பதால்......... என்னால் வர முடியாது.. நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்!!!
:P

said...

ஓய்வு பெறுவது எப்படி என்பது வெறும் உரையோடு நின்று விடுமா அல்லது செயல்முறை விளக்கமும் இருக்குமா என்ற கோரிக்கையை அனுப்பியுள்ளவர்கள்.

திருப்பூர் கரிசல் ,
ஹைதராபாத் கூர்கி,
துபாய்ல கிசும்பன்
ஈப்போ சிக்னேஸ்வரன்
சிங்கப்பூர் குகதீசன்.
சென்னை அதிர்ஷ்ட பார்வை
மற்றும் திரளானப் பதிவர்கள்.

said...

ஓய்வு பெறுவது எப்படி என்பது வெறும் உரையோடு நின்று விடுமா அல்லது செயல்முறை விளக்கமும் இருக்குமா என்ற கோரிக்கையை அனுப்பியுள்ளவர்கள்.

திருப்பூர் கரிசல் ,
ஹைதராபாத் கூர்கி,
துபாய்ல கிசும்பன்
ஈப்போ சிக்னேஸ்வரன்
சிங்கப்பூர் குகதீசன்.
சென்னை அதிர்ஷ்ட பார்வை
மற்றும் திரளானப் பதிவர்கள்.