Thursday, December 20, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

பூக்களின் மவுனம்...


இலவச உதவி எவரிடமும் கேட்காதே ...
இயற்கைச் சொல்லித்தரும் பாடம்,

கனியில் சுவை இல்லாது போனால் ?
அசையாது இருக்கும் மரம் செடிகள்
அகிலம் முழுவதும் பரவ, அவற்றின்
விதைப்பரவல் என்பது சாத்தியமா ?
கனியின் சுவையால் மரம் செடி கண்ட பலன்
எதுவுமில்லை, மறைமுகமாக
என் வித்தை விதைக்கும் உனக்கு என்
கைமாறு இதோ என் கனிகள் !
கைகண்ட பலன் விதைப்பரவலே.

வண்ணமும் மணமும் பெற்றுக் கொள்,
அருகில் வந்தால் இன்னும் கூட
பரிசு...!
தேனையும் உரிஞ்சலாம்,
தேன் ஈயே...!
இவற்றிற்கு உன் கால்மாறு
என் (மகரந்த) சேர்க்கைக்கு உதவுவது.

"உனக்கு உதவி தேவைப்படும் முன்
உதவுபவர்களுக்கு விருந்தை
தயாராக வை...!"

மென்மைப் பூக்களின் மேன்மை
அழகிலும் மணத்திலும் மயங்கி
வண்ண இதழ்களின் ஊடே
தேன் துளியைச் சுவைத்துக் கொண்டே
வண்டுகள் பாடும் ரீங்காரம்...
பூக்களின் மெளன மொழியை
புரிந்து கொள்பவர்களுக்கென
மொழிப்பெயர்த்துக் கொண்டே தான்
இருக்கின்றன...

4 : கருத்துக்கள்:

said...

உனக்கு உதவி தேவைப்படும் முன்
உதவுபவர்களுக்கு விருந்தை
தயாராக வை...!"

முடிந்த அளவு வாங்கிக்க தயார். :-))

said...

//உனக்கு உதவி தேவைப்படும் முன்
உதவுபவர்களுக்கு விருந்தை
தயாராக வை...!"//

எனக்கும் பிடித்த வரிகள் இவை!

அனுபவித்திருக்கிறேன்!

கருத்தான கவிதை!

said...

நல்ல சிந்தனை, நல்ல கவிதை...

தினேஷ்

said...

அன்பிற்கினிய நண்பர் சிங்கை கோவி. கண்ணன் அவர்களுக்கு அன்புடன் நண்பர் A.S. முஹம்மது அலி எழுதும் மின் மடல். தாங்கள் எனது www.pettagum.blogspot.com பார்த்து தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு நன்றிகள்! தங்களின் பிளாக் பார்வையிட்டேன் கவிதைகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருந்தது. தொடர்ந்து தொடர்பில் இருக்க விழைகின்றேன். அன்புடன் A.S.முஹம்மது அலி