Friday, August 10, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

நொடிக்கவிதைகள் அருட்பெருங்கோவுக்கு போட்டியாக ! :)





நொடிக்கவிதைகள் !

நொடிக்குள் பூகம்பம் நிகழும் ?
உன்னைப் பார்த்ததும் உணர்ந்தேன் !!

உன் தூண்டில் மீன் விழிகளில்
அகப்பட்டுக் கொண்டேன் நான் !

கன்னம் கூட இனிப்பறிந்தது
நீ தந்த 'இச்சால்'

நான் சுயநலக்காரன் ? உன்னைப் பார்த்த
அன்றே மறந்துவிட்டேன் என் சுயத்தை !

உன் இமைகள் அசைவின் ஒலியை
என் இதயம் கேட்பது எப்படி ?

7 : கருத்துக்கள்:

said...

கலைவாணியின் கைகளில் கிட்டார்
மாறவில்லை கவிஞர்கள்

said...

//chittoor.S.Murugeshan said...
கலைவாணியின் கைகளில் கிட்டார்
மாறவில்லை கவிஞர்கள்
//
கலைவாணியின் கைகளுக்கு கிடைக்கமாட்டார்களா ? ( கிட்டார் ?)
:)))

said...

கோவி,

/உன் தூண்டில் மீன் விழிகளில்
அகப்பட்டுக் கொண்டேன் நான் !/

தூண்டில் மீன் விழி - அழகான முரண் :)

said...

//கன்னம் கூட இனிப்பறிந்தது
நீ தந்த 'இச்சால்'//


கோவி!
இது நொடிக் கவிதைதான் ஆனால் நொடியில் மறக்க முடியாத கவிதை!!!!

said...

உன் தூண்டில் மீன் விழிகளில்
அகப்பட்டுக் கொண்டேன் நான் !

வார்த்தைகள் அருமை

said...

புதுக் கவிதை சொல் என்றாய்
நீ என்றேன்.
கவுஜ சொல் என்றாய்
நான் என்றேன்.
மரபுக் கவிதை சொல் என்றாய்
குழந்தை என்றேன்.
'பின்'நவீனத்துவ கவிதை கேட்டாய்
நடிகைகள் நனையும் போது
உள்பாவடை அணிவதில்லை என்றேன்.

விருட்டென்று போய்விட்டாய்.
ஜூட் விட்டுவிட்டா?
ஜட்டி வாங்கவா?

அறியாமல் தவித்திருக்கிறேன்
வாயில் விரல் வைத்து சூப்பியபடி

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

said...

எல்லா கவிதைகளும் நன்றாக இருந்தது.

//கன்னம் கூட இனிப்பறிந்தது
நீ தந்த 'இச்சால்'//

இது சூப்பரு.