Sunday, June 17, 2007

தமிழ்மணம் கருவிபட்டை

அப்பாவுக்கு அப்பாவாக ! இன்று தந்தையர் நன்நாள் !

இன்றைக்கு தந்தையர் தினம். பெற்றோர் இருவரில் உயர்ந்தோர் யார் என்று சொல்லவே முடியாது. இந்த பதிவு...தந்தையின் மதிப்பை உணர்ந்தவர்களுக்கும்... தந்தையை இழந்து அவர்தம் நினைவை அசைபோட்டு நெகிழ்பவர்களுக்கும் சமர்பணம். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதி...சிங்கை தமிழ்முரசில் வெளிவந்த ஒரு கவிதை(முயற்சி)

அப்பாவுக்கு அப்பாவாக !

இருபதை கடந்த இளைஞனாய் இருந்த நான்
இல்லறம்கான திருமணம் செய்து வாழ்தினாய் நீ !
இனிய இல்லறம் நடத்திய உனக்கு
இன்னொரு அறுபதாம் திருமணம் செய்து வாழ்துப் பெற்றேன் நான் !
நடந்த என்கால்கள் மிதிவண்டி பழக
மிதிவண்டி வாங்கி வந்தாய் நீ !
நடந்த உன்கால்கள் தடுக்கி விழாமல் இருக்க
ஊன்றுகோல் வாங்கி வந்தேன் நான் !

தேழனாய் மாறி பாலன் என்னுடன்
பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்தாய் நீ !
தோழனாய் மாறி பழுத்த உன்னுடன்
பரமபதம், சோளி விளையாடி மகிழ்ந்தேன் நான் !

திருவிழாக்களுக்கும், கடைவீதிகளுக்கும்
அன்பாக தூக்கி சென்றாய் நீ !
திருக்கோவில்களுக்கும், கடற்கரைகளுக்கும்
அன்பாக அழைத்து சென்றேன் நான் !

அருகிலிருந்து அக்கறையாய் எனக்கு
அரிச்சுவடி சொல்லி கொடுத்தாய் நீ !
அருகிலிருந்து ஆர்வத்துடன் உனக்கு
அன்றாட செய்திகளை வாசித்தேன் நான் !

யானையாய் மாறி என்னை இடம் வலமாய்
தூக்கி சுமந்தது மகிழ்த்து, மகிழ்ந்தாய் நீ !
பூனையாய் மாறி உன்னை அங்கும் இங்கும்
தூக்கி அறைகுள் இடம் மாற்றி நெகிழ்ந்தேன் நான் !

தவழ்ந்தது போதும் என்று
தள்ளாடி தள்ளாடி எழுந்த நான்
தடுக்கி விழாமல் நடை பழக
தள்ளும் நடைவண்டி வாங்கினாய் நீ !

தளர்ந்ததால் உன் நடை
தள்ளாடி தள்ளாடி
தவழவும் நிலைக்கு வந்த போது
தள்ளும் சற்கர நாற்காலி வாங்கினேன் நான்!

எனக்கொரு குழந்தையாய் மாறினாய் நீ !
உனக்கொரு தந்தையாய் மாறிப் போனேன் நான் !

கருவறைவிட்டு வந்த என்னை,
ஆனந்த கண்ணீருடன், நெகிழ்ந்த இதயத்துடன்
கைகளில் ஏந்தி சென்றாய் நீ !

கல்லறைக்குள் விட்டு செல்ல உன்னை,
ஆ(ற்)றாத கண்ணீருடன், கனத்த இதயத்துடன்
தோள்களில் தூக்கி செல்கிறேன் நான் !


அன்புடன்
கோவி.கண்ணன்

இணைந்த கைகள் அந்திநேர தென்றல் காற்று....பாடலையும் கேட்டு மகிழுங்கள்

8 : கருத்துக்கள்:

said...

நல்ல கவிதை கோ.வி.கண்னன்!

கடைசி வரிகளிலே கண்களில் நீர் கோர்க்க வைத்தீர்கள்!

நன்றி!

தந்தையர் தினத்தை நினைவு கூர்ந்தமைக்கு!

said...

அருமையான வரிகள், கோவி.கண்ணன்!

said...

// நாமக்கல் சிபி said...
நல்ல கவிதை கோ.வி.கண்னன்!

கடைசி வரிகளிலே கண்களில் நீர் கோர்க்க வைத்தீர்கள்!

நன்றி!

தந்தையர் தினத்தை நினைவு கூர்ந்தமைக்கு! //

சிபி வாங்க,

'படிச்சவங்க'ளெல்லாம் அப்படித்தான் சொல்கிறார்கள்...சோகமாக இருக்கிறதாம் !
:(

said...

//தென்றல் said...
அருமையான வரிகள், கோவி.கண்ணன்!
//

தென்றல் வந்து பதிவை தொட்டு பாராட்டியதற்கு நன்றி !

said...

//'படிச்சவங்க'//

ம்.புரிகிறது கோவியாரே!

said...

கண்ணீர்... வேறெதுவும் சொல்லத்தோணவில்லை..

said...

அருமையான கவிதை ஜிகே. பெற்றோர்கள் செய்ததற்கு கைமாறாக நாம் என்னதான் செய்தாலும், எதையுமே எதிர்பார்க்காமல் அவர்கள் செய்ததற்கு ஈடாகுமோ!

said...

இழந்த அப்பாவை மீண்டும் இழந்தது போன்று ஒரு உணர்வு..மற்றுமொரு முறை இழப்புக்காக அழுதேன்
அருணா